Header Ads



தனிநபர் ஆட்சியினை செயற்படுத்த, ரணில் காத்திருக்கிறார் - வாசுதேவ


பிரதமர் ரணில் மூலமாகவே தற்போதைய ஆட்சி நடைபெற்று வருவதாகவும், அவரின் சூழ்ச்சிகரமான செயற்பாடுகளை முறியடிப்பதே எமது முக்கிய கடமை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சியினர் இன்று -04- ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார்.

மேலும், பிரதமர் ரணில் முயற்சித்த சூழ்ச்சிகரமான செயற்பாடுகள் தோல்வியடைந்து கொண்டே வருகின்றது எனவும், அவர் திட்டமிட்ட முறையினில் தனிநபர் ஆளுமை செய்வதும் தடைப்பட்டு கொண்டு வருகின்றதாகவும் சுட்டிக்காட்டினார்.

இவற்றினை தாங்கிக்கொள்ள முடியாத ரணில் தனது தனிநபர் ஆட்சியினை செயற்படுத்துவதற்கு காத்திருப்பதாக என்னால் நிச்சயமாக கூறமுடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.