Header Ads



பேஸ்புக்கில் எழுதிவிட்டு, தற்கொலை - பொல்காவலயில் சம்பவம்

இலங்கையின் பொல்காவல பிரதேசத்தில் கடந்த 9ம் திகதி சமிந்த என்றஇளைஞன் 'என்னுடைய பேஸ்புக் நண்பர்களே நான் இன்றுடன் எனது பேஸ்புக் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.'என்று பதிவேற்றிவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காதல் தோல்வியே இதற்கான காரணம் என்று அவனது நண்பர்கள் தெரிவித்துள்ளதாககுறிப்பிடப்பட்டுள்ளது.

சமிந்தவின் காதலி கடவத்த பிரதேசத்தில் வைத்தியராக கடமையாற்றுவதாகவும், இவ்வாறு குறித்த இளைஞன் தற்கொலை செய்து கொள்வதற்கு முதல் தனது காதலியை சந்திக்கசென்றதாகவும், அங்கு என்ன நடந்தது என்பது புரியாத நிலையில் திரும்பி வந்த, சமிந்த இவ்வாறான முடிவுக்கு வந்துள்ளதாகவும் நண்பர்கள்சுட்டிக்காட்டியுள்ளனர்.

சமிந்த புகையிரதத்தில் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவனது காதலிக்கு அவளது பெற்றோர் வேறொரு இடத்தில் திருமணத்தை நிச்சயித்திருந்ததாகவும் இதனால் சமிந்த மிகவும் மன இறுக்கத்தோடு காணப்பட்டதாகவும் அவனது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

1 comment:

Powered by Blogger.