வசீம் தாஜூடீன் குடும்பத்தினர், வீதியில் இறங்கிப் போராட உள்ளதாக எச்சரிக்கை
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் குடும்பத்தினர் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்த உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தாஜூடீனின் கொலை குறித்த விசாரணைகள் மூடி மறைக்கப்பட்டாலோ அல்லது கிடப்பில் போடப்பட்டாலோ வீதியில் இறங்கி போராட்டம் நடத்த நேரிடும் என தெரிவித்துள்ளனர்.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் தமக்கு நம்பிக்கையிருப்பதாக தாஜூடீன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறெனினும், ஏனைய விசாரணைகளைப் போன்றே இந்த விசாரணைகளும் கிடப்பில் போடப்பட்டுவிடுமோ என்ற சந்தேகம்எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அரசியல் அழுத்தங்கள் காரணமாக இவ்வாறு விசாரணைகள் முடக்கப்படுமோ என்ற அச்சம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
தாஜூடீன் கொலை குறித்த வழக்கில் நீதி கிடைக்காவிட்டால் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த நேரிடும் என குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment