Header Ads



"முஸ்­லிம்­களின் உள்­ளத்தில் குர்ஆன்" - சிங்களவர்களுக்கு உண்மையை விளக்க தீர்மானம்


பொது­ப­ல­சேனா உட்­பட மற்­றும் சில இன­வாத பௌத்த அமைப்­புகள் முஸ்­லிம்­க­ளுக்கும் முஸ்­லிம்­களின் புனித குர்­ஆ­னுக்கும் எதி­ராக மேற்­கொள்ளும் பிர­சா­ரங்­கள் தவ­றா­னவை என்­பதை நிரூ­பிப்­ப­தற்கு தேசிய சூரா கவுன்ஸில் பல திட்­டங்­களை வகுத்­துள்­ளது.

இதன் அடிப்­ப­டையில் இன்னும் சில தினங்­களில் தேசிய சூரா கவுன்சில் 21 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் அழைத்து பேச்­சு­வார்த்தை நடத்த திட்­ட­மிட்­டுள்­ளது. 

இதற்­கான செயற்­றிட்­டங்­களை வகுப்­ப­தற்கு இன்றும் நாளையும் தேசிய சூரா கவுன்ஸில் நிர்­வா­கிகள் ஒன்று கூடி பல தீர்­மா­னங்­களை மேற்­கொள்­ள­வுள்­ளனர்.

தேசிய சூரா கவுன்­ஸிலின் பொரு­ளாளர் மௌலவி சியாத் இப்­றா­ஹீமை ‘விடி­வெள்ளி’ தொடர்பு கொண்டு பொது­ப­ல­சேனா அமைப்பு புனித குர்­ஆனை தொட­ராக சவா­லுக்­குட்­ப­டுத்தி வரும் நிலையில் சூரா கவுன்­ஸிலின் நட­வ­டிக்­கைகள் பற்றி வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

‘ஞான­சார தேரர் முஸ்­லிம்­க­ளையும் புனித குர்­ஆ­னையும் சவா­லுக்­குட்­ப­டுத்தி வரு­வதும் விவா­தங்­களை நடத்­து­வ­தற்கு அழைப்பு விடுப்­பதும் அர­சியல் நிகழ்ச்சி நிரலின் பின்­ன­ணி­யாகும்.

இதன் மூலம் முஸ்­லிம்­களை இந்­நாட்டின் எதி­ரி­க­ளா­கவும் பௌத்­தத்தின் துரோ­கி­க­ளா­கவும் சித்­த­ரிக்க முயற்­சிக்­கின்றார்.

அதனால் முஸ்­லிம்­களும் முஸ்லிம் இயக்­கங்­களும் தூர நோக்­குடன் செயற்­பட வேண்டும். 

புனித குர்­ஆனை ஞான­சார தேரர் கூறு­வது போன்று எவ­ராலும் அழித்­து­விட முடி­யாது. முஸ்­லிம்­களின் உள்­ளத்தில் குர்ஆன் குடி கொண்­டுள்­ளது ஆழ­மாகப் பதிந்­துள்­ளது. விவா­தத்­துக்கு அழைத்து முஸ்­லிம்­களை சண்­டைக்கு இழுக்க வேண்டும் என்­பதே அவர்­களின் நோக்­க­மாகும்.

ஞான­சார தேரர் உட்­பட ஏனைய இன­வாத அமைப்­பு­களின் முஸ்­லிம்கள் மீதான குற்­றச்­சாட்­டு­களும்; குர்ஆன் மீதான தவ­றான கருத்­து­களும்; பிழை­யா­னவை என்­பதை நிரூ­பிப்­ப­தற்கு சூரா சபை ஊட­க­வி­ய­லாளர் குழு­வொன்­றினை நிய­மித்து அதன் மூலம் பெரும்­பான்மை மக்­க­ளுக்கு உண்மை நிலை­மையை விளக்­கு­வ­தற்குத் திட்­ட­மிட்­டுள்­ளது.

அத்­தோடு நாட்டில் சட்­ட­மொன்று உள்­ளது சட்­டத்தை மீறு­ப­வர்­க­ளுக்கும்; இன­வாத உணர்­வு­களைத் தூண்டி பிரச்­சி­னை­களை உரு­வாக்­கு­ப­வர்­க­ளுக்கும் அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

1 comment:

  1. Please be ready with your replies to Aallegations , but do not go public until such time it is requested by law or utmost necessity.

    ReplyDelete

Powered by Blogger.