தெஹிவளையில் பொலிஸ் அதிகாரி போலச் சென்று, மக்களிடம் பணம் பெற்றவர் கைது
தெஹிவளையில் பொலிஸ் அதிகாரி போலச் சென்று மக்களிடம் பணம் பெற்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர் பிலியந்தலை - மிரிஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
அவரை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment