Header Ads



"பொய் செய்தி வெளியிடும், ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை"

நாட்டின் சுதந்திரமான ஊடக நிலையை சாதகமாக பயன்படுத்தி மற்றும் ஊடக தர்மத்துக்கு புறம்பாக அரசாங்கத்துக்கும், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்க தலைவர்களுக்கு எதிராக பொய் செய்தி வெளியிடும் ஊடகங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலங்சூரிய, வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது. இவ்வாறான பொய் செய்தி வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக, தற்போது நடைமுறையில் உள்ள ஊடக சட்டங்கள் மற்றும் முறைமைகளுக்கு அமைய தேவையான நடவடிக்கை எடுக்க அரசாங்கத்துக்கு நேரிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

1 comment:

Powered by Blogger.