Header Ads



காஷ்மீர், இந்தியாவுக்குச் சொந்தமில்லை


-அஜ்மல் ஹக்-

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு காஷ்மீர் மக்களுக்கும் உலக நாடுகளுக்கும் அளித்த வாக்குறுதி...

ஜூன் 16, 1952-ல் இந்திய பாராளுமன்றத்தில் ஜவஹர்லால் நேருவின் அறிக்கை.

முறையான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, "நாங்கள் இந்தியாவுடன் சேர்ந்திருக்க விரும்பவில்லை" என காஷ்மீர் மக்கள் கூறுவார்களானால், எங்களுக்கு அது வருத்தமாக இருப்பினும் நாங்கள் அதை ஏற்றுக் கொள்ள தயாராகவே உள்ளோம். நாங்கள் அவர்களுக்கு எதிராக இராணுவத்தை அனுப்பப் போவதில்லை.
------

இந்திய பாராளுமன்றத்தில் பிப்ரவரி 12, 1951-ல் ஜவஹர்லால் நேருவின் அறிக்கை..
காஷ்மீர் மக்களுக்கும் இதோடு கூடவே ஐக்கிய நாடுகள் சபைக்கும் நாம் வாக்குறுதி அளித்துள்ளோம். நாம் முன்பும் அதில் உறுதியாக இருந்தோம்.இன்றும் உறுதியாக இருக்கின்றோம். காஷ்மீர் மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.

------
செப்டம்பர் 11, 1951-ல் ஜவஹர்லால் நேரு ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதிய கடிதம்.
காஷ்மீர் இந்தியாவுடன் தொடர்ந்து இணைந்திருப்பதா? என்ற கேள்விக்கு பதில் –
ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் ஜனநாயக முறையிலான, சுதந்திரமான, சார்பற்ற வாக்கெடுப்பு (Plebiscite) நடத்தப்படுவதன் மூலமே முடிவு செய்ய முடியும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியை இந்திய அரசாங்கம் மீண்டும் உறுதி செய்கின்றது. ஆனால் அத்தகைய ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்க்கான சூழ்நிலைகள் விரைவில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் இந்திய அரசு .ஆவலுடன் உள்ளது.

------
பாகிஸ்தான் பிரதமருக்கு இந்திய பிரதமர் நேரு அனுப்பிய தந்தியில் பின்வருமாறு கூறுகிறார்,
இத்தகைய அவசர காலகட்டத்தில் காஷ்மீருக்கு நாங்கள் உதவுவது, அப்பிரதேசம் இந்தியாவுடன் இணைவதற்காக செய்யப்படும் நெருக்குதல் அல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
நாங்கள் தொடர்ந்து வெளிப்படையாக தெரிவித்து வருகின்ற கருத்து என்னவென்றால்,ஒரு சர்ச்சைக்குரிய பிரதேசமோ அல்லது மாநிலமோ இணைய வேண்டுமானால் அம்மக்களின் விருப்பத்தின் பேரில் தான் அது முடியும் என்ற கருத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
(தந்தி எண் : 402, அக்டோபர் 27, 1947 தேதியிட்டது)

------
ஆல் இந்தியா ரேடியோ மூலம் நவம்பர் 3, 1947-ல் நேரு நாட்டு மக்களுக்கு கூறிய செய்தி..
காஷ்மீரின் தலைவிதியை அம்மக்கள் தான் இறுதியாக முடிவு செய்ய வேண்டும் என நாம் பிரகடனப்படுத்தி உள்ளோம். இவ்வுறுதி மொழியை காஷ்மீர் மக்களுக்கு மட்டுமல்லாமல், உலகிற்கே நாம் அளித்துள்ளோம். இதிலிருந்து நாம் பின் வாங்க மாட்டோம். பின் வாங்கவும் முடியாது.

No comments

Powered by Blogger.