Header Ads



குவைத்திலிருந்து 15 இலங்கைப் பெண்கள் நாடு திரும்பினர்

வெளிநாடுகளுக்கு பணிகளுக்கு சென்ற இலங்கைப் பெண்கள் 15 பேர் அங்கு பல்வேறுபிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த நிலையில் இன்று -20-  நாடு திரும்பியுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் குவைத் நாட்டிற்கு சென்ற பணிப்பெண்கள் என்றும், அங்குநிர்க்கதிக்குள்ளான நிலையில் நாடு திரும்பியுள்ளதாகவும் வெளிநாட்டுவேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த பெண்கள் தாம் பணிபுரிந்த வீடுகளில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்தநிலையில்,குவைத்திலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தில்தங்கவைக்கப்பட்டிருந்ததுடன்,இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின்தலையீட்டினால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இன்று கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு வந்தடைந்த இவர்களை அவர்களதுவீடுகளுக்கு செல்லும் வசதிகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செய்துகொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.