Header Ads



துறவறத்திலிருந்து தினமும் தப்பியோடும், 10 பௌத்த பிக்குகள்

புத்த விவகார திணைக்களத்திற்கு ஒரு நாளைக்கு சராசரியாக எட்டு தொடக்கம் 10 வரையிலான துறவிகள் தங்களது துறவில் இருந்து நீங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறவில் இருந்து 18 தொடக்கம் 20 வயதுடைய துறவிகளே இவ்வாறு நீங்கி விடுகின்றனர் என புத்த விவகார ஆணையாளர் நாயகம் நிமால் கொடவலகெதர தெரிவித்துள்ளார்.

எனினும், சிரேஸ்ட துறவிகள் மூலம் இதற்கான காரணங்கள் குறித்து விசாரைணைகளை மேற்கொள்ள இருப்பதாக புத்த விவகார திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கயைில் 2016ஆம் ஆண்டு கணக்கெடுப்புகளின் படி புத்த விவகார திணைக்களத்தில் 37 ஆயிரத்து 691 புத்த துறவிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.