பிரார்த்திக்கிறோம்...!
ஜம் இய்யதுஷ் ஷபாப் நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் அஷ்ஷெய்க்ஹ் ஷபர் ஷாலி (மல்வானை) அவர்களின் மறுமை வாழ்விக்காகப் பிரார்த்திப்போம்.
இறந்தவருக்காகச் செய்யும் துஆ
اَللّهُمَّ اغْفِرْ لزفرصالح ِ وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيّيْنَ وَاخْلُفْهُ فِيْ عَقِبِهِ فِي الْغَابِرِيْنَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِيْنَ وَافْسَحْ لَهُ فِيْ قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيْهِ
அல்லாஹும்மக்ஃபிர் லி [ஸபர் சாலிஹ் வர்ஃபஃ தரஜ(த்)தஹு ஃபில் மஹ்திய்யீன வஃக்லுஃப் ஹு ஃபீ அகிபிஹி ஃபில் காபிரீன் வக்ஃபிர் லனா வலஹு யாரப்பல் ஆலமீன் வஃப்ஸஹ் லஹு ஃபீ கப்ரிஹி வநவ்விர் லஹு ஃபீஹி.
இறந்தவருக்காகச் செய்யும் துஆ
اَللّهُمَّ اغْفِرْ لزفرصالح ِ وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيّيْنَ وَاخْلُفْهُ فِيْ عَقِبِهِ فِي الْغَابِرِيْنَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِيْنَ وَافْسَحْ لَهُ فِيْ قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيْهِ
அல்லாஹும்மக்ஃபிர் லி [ஸபர் சாலிஹ் வர்ஃபஃ தரஜ(த்)தஹு ஃபில் மஹ்திய்யீன வஃக்லுஃப் ஹு ஃபீ அகிபிஹி ஃபில் காபிரீன் வக்ஃபிர் லனா வலஹு யாரப்பல் ஆலமீன் வஃப்ஸஹ் லஹு ஃபீ கப்ரிஹி வநவ்விர் லஹு ஃபீஹி.
பொருள் : இறைவா! [.....................] மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக! ஆதாரம்: முஸ்லிம்
சேவைகள்:
ஷேக்ஹ் அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தை முன்னெடுப்பதில் கடுமையாக ஆர்வம் காட்டி பல உலமாக்களை அறவனைத்து சீரிய கட்டமைப்பில் தம் பணியைக் கொண்டு சென்றவர். மாற்று மத நண்பர்களிடத்தில் சமாதானம், சகவாழ்வு என்ற தொணியில் பெரும்பான்மை சமூகத்தினரிடத்தில் இஸ்லாத்தின் நன்மதிப்பை வளர்ப்பதற்காக தன்னை அர்ப்பணித்து வெற்றியும் கண்டவர்.
கல்வி முன்னேற்றத் துறையில் தன் வாழ் நாளில் பலதைக் கழித்தவர். சமூக சேவையில் சடைவின்றி கடைசி நேரம் வரை பணியாற்றியவர்.
மல்வானை அல் முபாரக தே.பா, இப்னு பாஸ் பெண்கள் அறபுக் கல்லூரி போன்ற கல்விக் கூடங்களில் முக்கிய பொறுப்புகளை சுமந்தவர்.
1997ம் ஆண்டுகளிலிலிருந்து AMYS எனும் தாபனத்தினூடாக பள்ளிவாயல்கள்,தஃவா நிலையங்கள் உருவாக்குதல்,புனரமைத்தல். கண் பரிசோதனையுடன் வெண்படல சத்திர சிகிச்சை களை முன்னெடுத்து பலருக்கு வெளிச்சம் கொடுத்ததோடு, அநாதைகள்,விதவைகளுக்கான உதவித் தொகை, நூல், துண்டுப் பிரசுரம், இருவெட்டுக்கள் போன்ற பல சமூக சேவைகளை முன்னெடுத்த இத் தியாகிக்காக அல்லாஹ்விடம் இப் புனித ரமழானில் அன்னாரின் மண்ணறை, மறுமையுடைய விசாரணைகளிலிருந்த்து ஈடேற்றம் பெற்று சுவனத்தை அல்லாஹ் கூலியாக கொடுக்க பிரார்த்திப்போம்.
-பஸால் இஸ்மாயில் ஸலபி-
30.06.2016
Post a Comment