Header Ads



முஸ்லிம்களாகிய நாம் வெகுண்டெழுந்து, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடக்கூடாது - ACJU


கடந்த வாரம் பொது பலசேனா செயலாளர் மஹியங்கனையில் பேசிய பேச்சும் அதன் பின் வெளியிட்ட கருத்தும் மாபெரும் மதநிந்தனை என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். குறித்த விடயம் பற்றி உரிய இடங்களுக்கு முறையீடு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கும் கவனம் செலுத்தப்படுகிறது. 

இந்நேரத்தில் முஸ்லிம்களாகிய நாம் வெகுண்டெழுந்து ஆத்திரமடைந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடக்கூடாது. அல்-குர்ஆன் மற்றும் ஸுன்னா வழிகாட்டியுள்ள அடிப்படையிலும் ஹுதைபிய்யாவின் படிப்பினைகளை முன்நிறுத்தியும் பொறுமையுடனும் நிதானத்துடனும் நாம் நிலைமைளை கையாள வேண்டும். கடந்த காலங்களில் நம் சமூகம் எதிர் நோக்கிய பிரச்சனைகளின் போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டலின் படி பொறுமை கைக்கொள்ளப்பட்டதையும் அதன் பலாபலன்களை நம் சமூகம் கண்டுக்கொண்டதையும் நாம் அறிவோம். அவ்வாறே தற்போதைய நிலைமையையும் நாம் அணுகக் கடமைப்படுகிறோம். 

எமது எதிர்ப்பு நடிவடிக்கைகள் சமயம் பார்த்து நிற்கும் குழப்பவாதிகளுக்கு துணையாக அமையக் கூடாது. அரசியல் இலாபம் தேடுவோர் முஸ்லிம்கள் குழம்புவதை எதிர்ப்பார்த்து தம் காரியங்களை சாதிக்க முயற்சிக்கக் கூடும்.

நாம் முஸ்லிம் உம்மத்தின் பாதுகாப்புக்காகவும் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுபவர்களின் நேர்வழிக்காகவும் துஆச் செய்ய வேண்டும். எந்த சக்தியாலும் இஸ்லாத்தை அழிக்க முடியாது. அதன் தூதை நையாண்டி செய்தோர், மதநிந்தனை செய்தோரின் முடிவை அல்லாஹுத் தஆலாவிடம் விட்டுவிடுவதே மிகவும் பொருத்தமானதாகும். 

நாம் காட்டும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீய சக்திகளுக்கு துணையாக ஆகாமல் பார்த்துக் கொள்வது நம் எல்லோரதும் கடமை என்பதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொது மக்களுக்கு அறிவுறுத்துகிறது.

வஸ்ஸலாம்.

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாரக்
கௌரவ பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா  

4 comments:

  1. YES KEEP CALM N MAKE DUA POLITICIANS MAKE ADVANTAGE ON THIS MATTER

    ReplyDelete
  2. Only Some of the Muslim politicians have given the social popularity to BBS by replying or answering to Galagoda Aththe Gnanasaara.

    If nobody care about his nonsense speeches than he doesn't have a identity in the public.

    Dear Mr RB and Mr RH, There is a proverb that "Action speaks louder than words"

    For the God sake Please don't heat the Muslims on the BBS activities.

    For the clubbing to make a sound Galagoda Aththe Gnanasaara is a one hand other hands are Azath Sally, Mujibur Rahman, BCAS owner Etc..

    These all people should be funded by same group to damage the harmony

    Thank you

    ReplyDelete
  3. This advice should be followed. Violence won't bring us any solutions. We have to be very careful in handling such problems.

    ReplyDelete

Powered by Blogger.