Header Ads



நீர்கொழும்பு பெரியமுல்லை நலன்புரிச் சங்கத்தின், கட்டார் கிளையின் பொதுக்கூட்டம்

நீர்கொழும்பு பெரியமுல்லை நலன்புரிச் சங்கத்தின் கட்டார் கிளையின் மூன்றாவது பொதுக்கூட்டம் எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது.

இச்சங்கத்தின் கட்டார் கிளையின் தலைவர் உமர் தலைமையில் துமாமாவில் அமைந்துள்ள அல் ஆயிஷா பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

நீர்கொழும்பு பெரியமுல்லை பகுதியில் வரிய கோட்டிற்கு கீழ் வாழ்கின்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் முகமாக அமைக்கப்பட்ட இச்சங்கம், மூன்று மாத கால எல்லைக்குள் சுமார் 10 ற்கும் மேற்பட்ட செயற்திட்டங்கள் நீர்கொழும்பு பெரியமுல்லை பகுதியில் முன்னெடுக்கப்பட்டு அவையாவன நிறைவேற்றப்பட்டுள்ளதாக இச்சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

கட்டார் கிளையின் மூன்றாவது பொதுக்கூட்டத்திற்கு கட்டார் நாட்டில் வாழ்கின்ற நீர்கொழும்பு பெரியமுல்லை வாழ் வாலிபர்களின் வருகையை எதிர்பார்ப்பதாகவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.

கட்டாரில் இருந்து செய்திகளுக்காக   நீர்கொழும்பு முஸாதிக் முஜீப்

No comments

Powered by Blogger.