Header Ads



பெளத்தர்கள் இஸ்லாத்தை நோக்கி, மதம் மாற்றப்படுவதால் முரண்பாடு முற்றுகிறது - மனோ


(Mano Ganesan  னுடைய பேஸ்புக்கிலிருந்து)

(06/04/16) <மதமாற்றங்கள் சகவாழ்வை குழப்புகின்றன> இந்த நொடியில் என் மனதில்……

மட்டக்களப்பு மாமாங்கம் கோவில் வீதியை சேர்ந்த உதயகுமார் இந்துமதி என்ற ஒரு பெண் நபர், புனித இஸ்லாம் மதத்தை தழுவிகொண்டு தன் பெயரை உதயகுமார் மபாசா என்று மாற்றிக்கொண்டுள்ளார் என்ற அறிவிப்பு இன்று 06/04/16/புதன்கிழமை வீரகேசரி விளம்பர அனுபந்த பக்கம் 02ல், குறிப்பிட்ட நபரால் வெளியிடப்பட்டுள்ளதை, சுட்டிக்காட்டி ஒரு நண்பர் காலையில் ரொம்பவும் வருத்தப்பட்டார்.

அத்தனைக்கும் வருத்தப்பட்ட நண்பர் ஒன்றும் கோவில், குளம் என்று பயணிக்கும் பெரும் ஹிந்து பக்தரும் அல்ல. வாரத்துக்கு ஒரு முறை ஆலயத்துக்கு போகும் ஒரு படித்த சராசரி சைவ இந்து இலங்கையர். இந்த நாட்டில் மத, இன நல்லுறவுகள் கட்டிக்காக்கப்பட வேண்டுமென அவர் விரும்புகிறார்.

இத்தகைய மதமாற்றங்கள் நாட்டின் இன சகவாழ்வுக்கு உகந்தது அல்ல என நான் நினைக்கின்றேன். விரும்பிய மதங்களை கடைப்பிடிக்கும் தனி மனித சுதந்திரம் என்ற அடிப்படையில் இத்தகைய நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது. நாட்டின் இன்றைய சூழலில் நாம் இன, மத, மொழி நல்லுறவுகளை, ஒற்றுமையை, சகவாழ்வை, வளர்க்க வேண்டிய கட்டத்தில் இருக்கும்போது, அதற்கு முரணான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது.

ஒரு மதத்தவர், இனத்தவர் மீது இன்னொரு மதத்தவர், இனத்தவர் எதிர்ப்பு உணர்வை முன்னெடுக்க இவை காரணங்களாக அமைந்து விடுகின்றன. சந்தேகக்கண் கொண்டு பார்க்க இவை காரணிகளாக அமைந்து விடுகின்றன.

இதேபோல் பெளத்தர்களும் ஆங்காங்கே இஸ்லாத்தை நோக்கி மதம் மாற்றப்படுவதால் அங்கேயும் முரண்பாடு முற்றுகிறது. பெளத்த, இந்து மதத்தவர் மத்தியில் கிறிஸ்தவ மதத்தை நோக்கிய மாற்றங்களும் நடைபெறுகின்றன. கிறிஸ்தவ மதம் என்னும்போது அது மதத்துடன் மாத்திரம் நின்று விடுகிறது. இஸ்லாம் என்று சொல்லும்போது அது ஒரு இனமாக மாறி விடுகிறது.

எனவே மத, இன முரண்பாடுகளால், ஏற்கனவே குழம்பி போயிருக்கும் இந்நாட்டில், இவை தொடர்பில் விழிப்புணர்வு தேவை. முற்போக்கு சிந்தனை கொண்ட இஸ்லாமிய, கிறிஸ்தவ நண்பர்கள் மத்தியில் கலந்துரையாடல் தேவை. மதமாற்ற தடை சட்டங்களும் தேவை.

மத, இன முரண்பாட்டு சந்தேக உணர்வுகள், சகவாழ்வுக்கு குந்தகம் விளைவிப்பதால், இவை சகவாழ்வு அமைச்சரான எனது அமைச்சு சார்ந்த பிரச்சினை என எண்ணுகிறேன். எனவே இது தொடர்பில் ஒரு அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்கும்படி, இன, மத சகவாழ்வுக்கு பொறுப்புள்ள அமைச்சர் என்ற முறையில் எனது செயலாளருக்கு இன்று நான் கூறியுள்ளேன்.

எல்லோரும் வெட்கப்பட்டு தவிர்க்கும், இந்த சர்ச்சைக்குரிய விடயத்தைப்பற்றி எவராவது முன்வந்து பேச வேண்டும். நான் இப்போ பேசிவிட்டேன். இனி என்னை கண்டமேனிக்கு திட்டி தீர்க்கலாம். (ஸ்டார்ட் மியூசிக்!)

35 comments:

  1. What a joke. Let people decide

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. முதலில் எல்லா மதத்தைப் பற்றி ஆழமாகப் படித்து உண்மையைக் கண்டறியுங்கள்

    ReplyDelete
  4. மனோகணேசன் அவர்களே, இந்த நாட்டில் மிகச் சிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவராக, ஜனநாயக வாதியாக, தனிமனித சுதந்திரத்தை மிகவும் மதிப்பவராக நினைத்தோம், அந்த நினைப்பில் நீர் காரி உமிழ்ந்து விட்டீர். இன, மொழி வெறி தலைகேறி, தனி மனித சுதந்திரத்தில் அடக்கு முறையை பிரயோகிக்க முயட்சிக்கின்றீர். இஸ்லாம் என்பது மனித குலத்துக்கு, இந்த அகிலத்தையே படைத்து பரிபாலிக்கும் எல்லாம் வல்ல இறைவனால் கொடுக்கப்பட்டது. இவுலகில் பிறக்கும் அனைவரும் இஸ்லாமியனாகவே பிறக்கின்றனர் எனவே நீங்கள் இயற்றப் போகும் சட்டம் இந்த நாட்டின் அனைவரையும் இஸ்லாமியனாக மாறவே வலியுறுத்தும். அது மிகவும் குழப்பத்தை இந்த நாட்டில் ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். உமது அமைச்சு பதவி, உனது 6 வது அறிவை குழப்பி விட்டது போல் தெரிகிறது. உடனடியாக உமது அமைச்சு பதவியை ராஜினாமா செய்து விட்டு, பழைய மனோகநேசனாக மாறுவீர் என நினைக்கிறோம். நீர் இந்த நல்லாட்சியை குழப்புவதற்கு திட்டம் தீட்டுகிறாய் என நினைக்கிறோம்.

    ReplyDelete
  5. Correct.hon.mp.mano.sir.namathu.nattil.ulla.indu.mathath.thalaivarkalum.buththa.matha.thalaivarkalum.ontru.sernthu.natavadikka.vendum.eppadiye.vitakkudathu

    ReplyDelete
  6. "இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்படுகின்றார்கள்" என்ற வசனத்தை இவர் பாவிப்பதன் காரணமாக முஸ்லிம்களுக்கும் ஏனைய மதத்தவர்களுக்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் வேலையை இவர் செய்கின்றார் .இஸ்லாம் பற்றிய தெளிவு இல்லாதவர் சகவாழ்வு அமைச்சராக இருப்பதற்கு பொருத்தமில்லாதவர் .

    ReplyDelete
  7. இதிலே திட்டுவதற்கு எதுவுமில்லை. தீர்ப்பதற்குத்தான் நிறையவுள்ளது!

    முதலில் ஒன்றைப்புரிந்துகொள்ளுங்கள். மதங்கள் ஒன்றும் மனிதனோடு பிறந்தவையல்ல. அவை அனைத்தும் பிறந்த பின்பு வந்து ஒட்டிக்கொள்பவையே. ஆடைகள் மனிதனுக்கும் அவன் வாழும் நாகரீகமடைந்த சமூக வாழ்க்கைக்கும் அவசியமானதுதான். ஆனால் மனிதன் ஆடைகளோடு பிறப்பதில்லை.

    ஆடைகளை அணிவது அவரவர் வாழிடம், வளரும் சூழல், புரியும் தொழில் போன்ற பல விடயங்களால் தீர்மானிக்கப்படுவதுபோல அவன் பின்பற்றும் மதமும் அவன் பிறந்த குடும்பம் போன்ற பல விடயங்களால் தீர்மானிக்கப்படுகின்றது.

    குறித்த மதப் பெற்றோருக்குப் பிறந்த காரணத்தால் மட்டுமே ஒரு குறித்த மதத்தை பின்பற்றுகின்றவர்கள்தானே நாம்..? யதார்த்தம் இவ்வாறிருக்கும்போது மதங்களுக்காக முரண்படுவதும் சண்டையிடுவதும் நகைப்புக்குரியது.

    வலது கையினால் உண்பது போன்ற ஒரு வழக்கம்தான் மதப் பின்பற்றலும். வலது கை இல்லாதவனின் நிலை என்ன..? இடது கையை நன்றாகச் சுத்தம் செய்தவிட்டும் சாப்பிட முடியும். அறிவியல் ரீதியாக அதனால் ஏதும் ஊறு நிகழ்வதில்லை!

    ReplyDelete
    Replies
    1. என்ன சொல்ல வருகிறீர்கள் யெஸ்லியா?

      Delete
    2. ella kulanthaum pirakum pothu muslim ithu theriyala ijabaoda karuthu kura vanthutanga karuthumma islatha padinga

      Delete
    3. ஜெஸ்லியா தாத்தா நீங்க கருத்து சொல்ல முந்தி ஒரு தடவக்கி ரெண்டு தடவ யோசிச்சி சொல்லுங்க!

      எந்த குர்ஆன் ஹதீஸ அடிப்படையா வெச்சி இஸ்லாம் பிறந்த பின்பு வந்து ஒட்டிக்கொண்ட மார்க்க என்று சொல்றீங்க??

      மனிதன் பிறக்கும் போதே முஸ்லிமாக பிறக்கிறான் என்ற நபிகளாருடைய போதனைகள் எல்லாம் பொய்யென்டு சொல்ல வர்ரீங்களா??

      Delete
    4. You know nothing about Islam keep quite.
      Adam (alai) was a Muslim what religion was he ?
      Lot of people think that Islam came from prophet mohamed. Islam actually full filled by him.
      All the rasools and nabi peached Islam ( submitting his will to Allah the one and only God )

      Delete
    5. Guys this fake account jesly not a muslim beleiving a busterd tamil comments under this.so admin have talled don't publish that fake comment.

      Delete
  8. மனோ கனேஷன் ? மனோ வியாதி கனேஷன் ?

    ReplyDelete
  9. .மனித உரிமை பற்றி வாய் கிழியக் கத்தும் மனோ கனேசனா இப்படிப் பேசுகிறார். தமிழ் மொழியில் உள்ள திருக் குர்ஆன் ஒன்றை வாசித்து விளங்கி இஸ்லாத்தை தழுவுமாறு அவருக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. லண்டனில் நான் வேலை செய்யும் கடைக்கு திருக்குரானை பின்பற்றும் துருக்கி நாட்டை சேர்ந்த உணவு விடுதி நடத்தும் நபர் வந்து பாண்,பால் வாங்கிச்செல்வது வழக்கம் அன்றொரு நாள் கிருஸ்மஸ் மாதம் வழமையாக எல்லா இடங்களிலும் அலங்காரம் செய்வது வழமை அதன் அடிப்படையிலும் வரும் வாடிக்கையாளர்களை மகிழ்விக்குமுகமாகவும் நான் வேலை செய்யும் கடையும் அழகு படுத்தப்பட்டது எமது கடைக்கு வந்த அவ் நபர் ஏன் இச்சோடனை நீங்கள் கிருஸ்தவரா எனக்கேட்டார் நாம் இல்லை இந்து என்ரோம் எதர்காக இது என கேட்டார் நாம் customer க்காக என்ரோம் அவர் கூறினார் fuck the customer என்று இது தான் குர்ஆன் கற்றுக்கொடுக்கும் பாடமா எமக்கு எப்படி குர்ஆனை பின்பற்றுபவர்களின் மேல் நல் அபிப்பிராயம் வரும் மற்றும் பெல்யியத்தில் நடந்த குண்டு வெடிப்பு சாதாரன பொது மக்கள் என்ன செய்வார்

      Delete
    2. Appo ltte terrorist etthanai appavi kulanthai pengalai kondru kuvitthanuhal.talk about these busterd..this is what your bhagavath geetha teach..

      Delete
  10. அவர்களாகவே மதம் மாறுகிறார்களே தவிர யாரும் மாற்றப்படவில்லை...

    ReplyDelete
  11. When the country constitution is saying " A Citizen has the freedom to chose a religion or philoshopy that he likes [Freedom of choice] How come I oppose the right of another individual and the constitution of the country.

    People who search for truth in life and when they find it They join it. What is wrong in it ? It is the right of every individual.



    Do not you think it is wrong to oppose the FREEDOM of a citizen who wanted to change his way of life for his own good will?

    Even so called DEMOCRACY for what people are making noise these days also accept this FREEDOM.

    NOW the matter is.. WHO OPPOSE this FREEDOM OF CHOICE ? WHY ?


    FOR Example... If I am selecting a RELIGION as my way.. IT is my right.. and No one can force me to follow their wills.

    I HOPE the people who respect the FREEDOM of others will Accept this information and stop any more speech toward harming FREEDOM of another citizen.

    ReplyDelete
  12. முதலில் ஹிந்து மதத்தை விட்டு வெளியேறும் ஹிந்துக்கள் ஏன் வெளியேறுகிறார்கள் என்கிற காரணத்தை அறிந்துகொண்டு அதை தவிர்க்க விழிப்புணர்வுகளை செய்யவும் அதை விட்டு விட்டு துவேச உணர்வால் விஷத்தை விதைக்காதீர். உம்முடைய அரசியல் சாக்கடையை நோக்கி நகருவது கொஞ்சம் காலமாகவே வெளிப்படுகின்றது.

    ReplyDelete
  13. First You are not following your Own Religion Properly. First Learn YOur Scriptures and Stop worshipping Stone. "Ekam evadvitiyam"
    "He is One only without a second."
    [Chandogya Upanishad 6:2:1]1
    "Na casya kascij janita na cadhipah."
    "Of Him there are neither parents nor lord."
    [Svetasvatara Upanishad 6:9]2
    "Na tasya pratima asti"
    "There is no likeness of Him."
    [Svetasvatara Upanishad 4:19]3

    ReplyDelete
  14. மதம் பற்றி பேச இந்த ஜஜ எந்த தகுதியும் கிடையாது ஜ முஸ்லிம் இவளின் கருத்துக்களை இங்கு பதிவிலட வேவேண்டுடாம்

    ReplyDelete
  15. No one forcing anyone to convert from their religion. Pls. correct your wordings Mr. Mano. It's people who decide in their own life.

    Example, How TMD converted from Islam to Buddhism.

    ReplyDelete
  16. it is stupid to say or think that muslims will pay money for converting non muslims to islam. recently one muslim boy became a monk. who cares ?

    ReplyDelete
  17. இந்த ஜெஸ்லியா ஒரு நாத்திக கொள்கையுடையவர் போல அவர் கருத்து பிரதிபலிக்கின்றது

    ReplyDelete
  18. Hon minister Mano Ganesan!
    You can lot to do to your society.
    1. Take out from your people out of cast.
    2. Make them respectable individual.
    3.don't you seen people life style in tea estates.
    4. How they Bering used for political disir by the politician in that area.
    5. Why this situations
    6. And more
    7. What are doing is completely another political agenda.

    Please look at following clip. And how can change your self and your society

    https://m.youtube.com/watch?v=jgsh8KyWK8Y

    ReplyDelete
  19. இவர் ஒரு நல்லவர் என முஸ்லிம்களுக்கு தோன்றும் எங்கள் அண்ணன் மனோ அவர்கள் உள்ளத்தில் உள்ளது கபட நாடகமே. இவருக்கு ஒரு முஸ்லிமும் வாக்களிப்பதில்லை என இவர் எத்தனை தடவை சொல்லி இருக்கிறார். கடந்த அரசில் இவர் பொது பல செனாவிட்கு எதிராக பேசியது ஒரு அரசியல் சூழ்ச்சியே. இவரும் வாசு தேவ நாணயகார போன்றோரும் பசு தோல் போர்த்திய புலியே. இவரின் இப்போதைய கூற்று இந்துத்வா வாதிகளின் கொள்கையையே வெளிப்படுத்துகிறது. இவரது இந்த கூற்று திரு மோடி அய்யாவை குஷிப்படுத்தும் கூற்றே அன்றி மக்கள் நலத்திற்கு அல்ல என்பது வெளிப்படையான உண்மையாகும். மதமாற்றம் தடை என்பதை விட மதம் மாற வேண்டிய காரணியை தேடுங்கள். தீண்டாமை, உயர் சாதி தாழ்ந்த சாதிபோன்ற கொள்கையை முதலில் துடைதேரியுங்கள். வசதியான உங்கள் கூட்டத்தை ஏழைகளுக்கு உதவ சொல்லுங்கள். கடைசியில் உங்களை நீங்கள் ஒரு முஸ்லிமாக காண்பீர்கள்.

    ReplyDelete
  20. Matham matrap paduvathu enpathai vida matham maruvathu enra pathamthan poruththamanathu. arasiyalamaipin moolam angiharikkapatta virumpiya mathaththai pinpatrum urimayai jananayaha murai moolam therivu seyyapatta jananayaha pesum neegal kattupaduththa ninaipathu muttalthanamanathu. (Intha varthai pirayohathitku mannithu kollungal. Ithai vida nalla varthai theriyavillai)

    ReplyDelete
  21. அஸ்ஸலாமு அலைக்கும்!

    மதிற்பிற்குரிய மனோ கணேசன் அமைச்சர் அவர்களே!

    உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக....

    தங்களை இதுவரை ஒரு நேர்மையான அரசியல்வாதி என்று நாங்களெல்லாம் நினைத்திருந்தோம், அந்த நினைப்பில் மண்ணை அள்ளி வீசிவிட்டீர்கள்.

    இப்போதும் உங்கள் சுய கருத்தாக இதனைப் பார்க்க எமது மனம் மறுக்கிறது. ஏனென்றால் இலங்கை வரலாற்றில் ஒருவர் தான் பின்பற்றும் மதத்தை விட்டு தான் சரிகண்ட வேறு ஒரு மதத்திற்கு மாறுவது ஒன்றும் புதிய விடயமல்ல.

    இந்துக்களும், பௌத்தர்களும் மட்டும்தான் அவ்வாறு மதம் மாறவில்லை ஒரு சில முஸ்லிம்களும் மேற்படி மதங்களுக்கு மாறித்தான் இருக்கிறார்கள் என்பதை தாங்கள் மறைத்தது ஆச்சர்யமாக இருக்கிறது.

    நீங்கள் இவ்வளவு காலமும் கண்டுகொள்ளாத இவ்விடயத்தை இப்போது புதிதாக கண்டுள்ளீர்கள் அதுவும் ஒரு நண்பர் சொன்னதால்தான் இந்த விடயமே உங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. நீங்கள் ஒரு உண்மையான இந்துவாக இதை சொல்லி இருந்தால் அதில் நியாயம் இருக்கலாம். மேலும், ஒருவர் மதம் மாறுவதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். உண்மையில் உங்கள் மனச் சாட்சிக்கே பொருந்தாத விசயங்களை கூறி இருக்கிறீர்கள் என்பதை பார்க்கும்பொது உங்களை நினைத்து கவலைப்படுவதா வெட்கப்படுவதா என்று புரியவில்லை.

    மதங்கள் பற்றிய போதிய அறிவு உங்களிடம் சிறிதளவும் இல்லை என்பது இதன்மூலம் தெளிவாக விளங்குகிறது குறிப்பாக நீங்கள் பின்பற்றும், அதைப்பற்றி புதிதாக கவலைப்படுவதாக கூறும் இந்து மதம் பற்றி சிறிதளவேனும் உங்களுக்கு மட்டுமல்ல இந்துக்களில் 99% வீதமாணவர்களுக்கு 5 % வீதமான அறிவும் இல்லை என்பது உலகறிந்த விடயம். உங்கள் வாழ்வில் இந்து மதத்தின் உண்மையான புனித 04 வேதங்களையும் எப்போதாவது படித்துள்ளீர்களா? நான் நினைக்கிறேன் அவற்றை உங்கள் கைகளால் தொட்டுக் கூட பார்த்திருக்கமாட்டீர்கள் என்று.

    ஏனென்றால் நீங்கள் ஒரு நடுநிலையான மனச் சாட்சியுள்ள மனிதனாக அவற்றைப் படித்திருந்தால் இன்று இவ்வாறான இழிய அறிக்கையை விட்டிருக்கமாட்டீர்கள் என்பது என் உறுதியான வாதம். நான் உங்களிடம் மிகவும் அன்பாக வேண்டிக்கொள்வது இவ்வாறான அறிக்கைகளை விடுவதற்கு முன் மக்கள் தமது மதத்தை விட்டு வேறு மதங்களுக்கு மாறுகிறார்கள் என்றால் ஏன், எதற்காக மாறுகிறார்கள் என்ற காரணத்தை தேடுங்கள். அந்த காரணத்தை உங்களால் மாற்ற முடியுமா என சிந்தியுங்கள், மேலும் உங்கள் மக்களுக்கு உங்கள் மதத்தின் உண்மையை மட்டும் உண்மையான வேதங்களில் இருந்து எடுத்துக் கூறுங்கள், அதை 100% பின்பற்றும் படி கூறுங்கள். அவர்கள் தற்போது நடைமுறையில் இருக்கும் உங்கள் மதத்தில் உள்ள குறைபாட்டினால், தங்களின் உள்ளத்தை தூய்மைப்படுத்த, உலகத்தை அமைதிப்படுத்த தேவையான வழிகாட்டல்களும், ஒழுக்கமான சமுதாயத்தைக் கட்டி எழுப்ப, தவறு செய்பவரை தடுக்க, இறைவனுக்கு கட்டுப்பட்டு நன்மை செய்பவருக்கு அளப்பரிய வெகுமதிகள் இருப்பதை புரிய வைப்பதற்கு, இன்னும் தேவையான எந்த விடயங்களும் இல்லாததால்தான் வேறு மதங்களை தேடுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அந்தக் குறைபாடுகள் என்ன என்பதை ஆராயுங்கள், அதன்பின் அவற்றை நிவர்த்திக்க முயலுங்கள் அப்போது உங்கள் மக்கள் நீங்களே வியக்கும் அளவுக்கு உண்மையை புரிந்து கொள்வார்கள் நீங்களும் உட்பட. நீங்கள் ஒரு அதிகாரமுள்ள அமைச்சர் என்ற ரீதியில் உங்கள் செலவில் மேற்படி 04 வேதங்களையும் உங்கள் மக்களுக்கு வழங்கலாம்)

    அதை விட்டுவிட்டு மற்ற மதத்தவர்களை குறிப்பாக இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறைகாண முயலாதீர்கள். நாங்கள் இஸ்லாத்திற்கு வாருங்கள் என்று எவரையும் வற்புறுத்தவில்லை அதற்கு இஸ்லாத்தில் எங்கும் அனுமதியும் இல்லை. அவர்களாக தேடி வந்து படிக்கிறார்கள் உண்மையை விளங்குகிறார்கள் மனம் மாறுகிறார்கள். இதில் எண்கள் சதித் திட்டங்கள் சத்தியமாக எதுவுமில்லை. வருபவர்களை வரவேண்டாம் என்று சொல்வதற்கு எங்களுக்கு உரிமையும் இல்லை. ஏனென்றால் இஸ்லாம் ஏக இறைவனின் மார்க்கம் அதை யார் வேண்டுமானாலும் பின்பற்றலாம். அதைத் தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை.

    ReplyDelete
  22. Mr no one is forcing them to become Muslims. We are not Christian missionaries.

    Islam clearly says al Quran 2:256

    2:256. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.

    ReplyDelete
  23. இப்போதுதான் உண்மை வெளி வரு ஹின்றது இவ்வளவு காலமும் அரசியலில் அனாதையாக இருக்கும் பொது எல்லா மதத்தையும் ஆதரிந்து பேசினார் இப்போது பதவிகள் கிடைத்து இருக்கிறது இப்ப சுய ரூபம் வெளி வருகின்றது

    எத்தனை நடிப்பு நடித்தாலும் ஒரு காபிரை நம்ப கூடாது என்று நமது மார்க்கம் சொல்ஹின்றது அதற்கு சான்றாக இவரி அமைந்து விட்டார்

    ReplyDelete
  24. இவரின் கருத்துக்களை பார்த்து நமக்கு நிறைய படிப்பினை கிடைத்து விட்டது.இந்தியாவின் RSS மோடி அரசின் யின் இலங்கைக்கான முகவராக மாறி இருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. Ilangaiyil konjam konjamaga valarchi kanum hindhuthva kolgaiku ivan than agent adhigamana facebook adharangal undu ivan thiraikku pinaal pala vidayangal undu

      Delete
  25. If people have a right , there's a reason for it ! You
    are one of the men who fought to win rights for all
    communities . And now you have your time and place to
    prove it and not to even open your mouth against it ,
    never mind the pain . It is unbelievable all these
    men are abusing their tongues and mother tongue .
    You may well have a good reason but remember, rights
    are more reasonable in a democracy . Windpipes are
    only to exit the burnt out gas and the mouths
    should not be used for that.

    ReplyDelete
  26. நல்ல வளர்ப்பு

    ReplyDelete
  27. Dear Mono Ganesan Sir,
    நான்  உங்களை பணிவாக கேட்டுக்கொள்வது  ''இந்து மதத்திற்கும் இஸ்லாத்திற்கும் இலையில் உள்ள வித்தியாசம் என்ற Dr. Zakir Naik's CDயை தயவு பார்க்கவும் 

    ReplyDelete

Powered by Blogger.