Header Ads



அஸ்மா பேகத்தின் 'செங்குருதியும் பச்சோந்தியும்'


புரவலர் புத்தகப் பூங்காவின் 36வது வெளியீடான பூகொடயூர்  அஸ்மா பேகத்தின் செங்குருதியும் பச்சோந்தியும் கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா , 07.05.2016 சனிக்கிழமை அன்று மாலை 3.30 மணிக்கு பூகொடை குமாரிமுல்லை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இலக்கியப் புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் முன்னிலையில்  நடைபெறும்.

இவ்விழாவிற்கு குமாரிமுல்லை முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் எம்.எம்.எம். ஸர்ஜூன் அவர்கள்  தலைமை வகிப்பார். வரவேற்புரையை பிரதி அதிபர் எம்.ஆர்;.எம். இர்ஷாத்  அவர்கள் நிகழ்த்துவார்.

நூலின் முதற்பிரிதியினை அல்ஹாஜ் எல்.ஐ.ஏ.எம். ஸப்வான் (JP) அவர்கள் பெற்றுக் கொள்வார்.

கருத்துரைகளை சமூகஜோதி ரபீக், ITN செய்தி ஆசிரியர், அல்ஹாஜ் சித்தீக் ஹனீபா ஆகியோர்  வழங்குவர்கள்.

மேமன்கவி சிறப்புரை ஆற்றுவார்.

ஏற்புரையையும்; நன்றியுரையையும் நூலாசிரியர்  பூகொடயூர் எம். என். அஸ்மா பேகம் நிகழ்த்துவார்.

கணித ஆசிரியர் எம்.டி. இக்பால் நஸார்  நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவார்;.

No comments

Powered by Blogger.