Header Ads



"முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது" - ரணில்

முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு அறிவுறுரை வழங்கியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களும், ஐக்கிய தேசிய முன்னணி அமைச்சர்களும் ஒருவரை ஒருவர் ஊடகங்களில் தாக்கி கொள்வது ஆரோக்கியமாகாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை அந்தஸ்துடைய சில அமைச்சர்களுக்கு பிரதமர் நேரடியாக அறிவுறுரை வழங்கியுள்ளார்.

தேசிய அரசாங்கமொன்றை அமைத்திருக்கும் வேளையில் இவ்வாறு முரண்பாடு ஏற்படுத்திக்கொள்வது பொருத்தமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணி அமைச்சர்களுடன் மோதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் பற்றி ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பிரதமுர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.