Header Ads



35 பேர் மீது விசாரணைகள் நிறைவு, 184 குற்றச்சாட்டுக்கள் பற்றி தொடருகிறது விசாரணை

முன்னாள் அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசஅதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களின் விசாரணைகள் முடிவுறும் தறுவாயில் உள்ளன

மோசடி தவிர்ப்பு பொலிஸ் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. 

இதில் சட்டவிரோதமாக முன்னாள் அமைச்சர் ஒருவர் சம்பாதித்த 2.5 மில்லியன் ரூபாய்கள் தொடர்பான விசாரணையும் உள்ளடங்குகிறது. 

இதேவேளை, இதுவரை 35 பேர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.

இந்த விசாரணைகளின் அடிப்படையில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்காக சட்டமா அதிபருக்கு அவை பாரப்படுத்தப்பட்டுள்ளன என்று 
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இன்னும் 184 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிதிமோசடி தவிர்ப்பு பிரிவு விசாரணைகளை நடத்திவருகிறது.S

No comments

Powered by Blogger.