Header Ads



அரசாங்கத்திற்கு எதிராக 2 வது தடவையாக, இன்று தேங்காய் உடைக்கப்பட்டது

கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்றைய தினமும் தேங்காய் உடைத்து கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். 

அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தி மற்றும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு ஆகியவற்றிற்கு எதிராகவே கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

கொடகவெல, வரலாற்று சிறப்புமிக்க அம்மடுவை செல்ல கதிர்காமம் ஆலயத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதன்போது கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். 

இதற்கு முன்னரும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சீனிகம தேவாலயத்தில் தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. 

1 comment:

  1. எத்தனை தேங்காய்கள் உடைக்கின்ரீர்களோ அத்தனை உடைவும் சுதந்திரக்கட்சியையே உடைத்துப்பாதியாக்கிக்கொண்டிருக்கின்றது..

    ReplyDelete

Powered by Blogger.