நிர்வாண குளியல் செய்தவர் 100,000 ரூபாய் சொந்தப் பிணையில் வெளியே வந்தார்
ஹிக்கடுவை, நாரிகம பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்து கடலில் நிர்வாணமாக நீராடியதால் கைது செய்யப்பட்ட ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பிரயாணியை, காலி நீதவான் நீதிமன்ற நீதவான் கேசர சமரதிவாகர, 100,000 ரூபாய் சொந்தப் பிணையில் செல்ல இன்று (06) உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சுற்றுலாப் பிரயாணி, தினமும் காலை கடலில் நிர்வாணமாக நீராடுவதால், குறித்த பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கும் சிறுவர்களுக்கும் பெரும் தொந்தராவாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இவர், கடந்த ஓகஸ்ட் 13ஆம் திகதியிலிருது தங்களது விடுதியில் தங்கியிருப்பதாக, விடுதியின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறை பொலிஸார் மற்றும் பொலிஸ் அவசரப்பிரிவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
Not enough
ReplyDelete