Header Ads



மகிந்த வந்ததால், சந்திரிக்கா வரவில்லையா..? (படங்கள்)

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64ஆவது வருடாந்த மாநாடு பொலன்னறுவைஇ கந்துருவெலையிலுள்ள ரஜரட்ட மைதானத்தில் தற்போது (02) நடைபெற்று வருகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறும் இம்மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய குருணாகல் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் முன்னாள் பிரதமர் தி.மு. ஜயரத்ன உள்ளிட்ட கட்சியின் பிரபலங்கள் பலர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஇ ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்ற பின்னர் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் நிலையில் நடைபெறும் கட்சியின் முதலாவது கட்சி அங்கத்தவர்கள் சந்திப்புடன் கூடிய நிகழ்வு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மகிந்த பங்கேற்கும் கட்சி நிகழ்வுகளில் தான் பங்கேற்கமாட்டேன் என சந்திரிக்கா முன்னர் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.