Header Ads



ஜனாதிபதி மைத்திரி, குப்பைக் கூடைக்குள் தலையை விட்டுக்கொள்ளும் தலைவர் அல்ல - ஹரின்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் ரீதியான என்றும் இணைந்து செயற்பட மாட்டார் என்பதில் தனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாக ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பதுளையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அதேபோல், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இடையில் இருக்கும் பிணைப்பு என்றும் உடையாது.

மஹிந்த ராஜபக்சவுக்கு இலகுவாக பயணம் செய்யும் சந்தர்ப்பத்தை நாங்கள் அவருக்கு வழங்கியுள்ளோம். மஹிந்த மீது நாங்கள் வைராக்கியம் கொள்ளவில்லை. நாங்கள் அவருக்கு வசதி வாய்ப்புகளை வழங்கினோம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளை நாங்கள் அன்று எதிர்நோக்கினோம். மஹிந்த ராஜபக்சவின் கூட்டங்களில் மக்கள் கூட்டத்தை காட்ட முடியும். எனினும் வாக்குகள் கிடைக்காது. மஹிந்த ராஜபக்ச இனி என்றுமே வெற்றி பெற போவதில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குப்பை குவியலுக்குள் சிக்கி குப்பைக் கூடைக்குள் தலையை விட்டுக்கொள்ளும் தலைவர் அல்ல. மஹிந்த ராஜபக்ச வாய் காரணமாக மீண்டும் ஏறப் போகிறார். அவர் அரசியல் சண்டியராக முயற்சித்து வருகிறார் எனவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.