Header Ads



மஹிந்தவிற்கு வேட்புமனு வழங்கினால், 36 சுதந்திரகட்சி முக்கியஸதர்கள் வெளியேறுவார்கள்..?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்பு மனு வழங்கினால் 36 க்கும் மேற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பிளவடையத் தீர்மானித்துள்ளனர்.

சுமார் 36 உறுப்பினர்கள் இவ்வாறு விலகிச் செல்ல தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்த சகல ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ்வாறு தீர்மானித்துள்ளனர்.

பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தவிர்ந்த ஏனைய அனைவரும் மஹிந்த போட்டியிடுவதனை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.