Header Ads



2 தடவை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர், மீண்டும் வேட்பு மனு கோர வெட்கப்படவேண்டும்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்பு மனு வழங்கப்படாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மஹிந்தவிற்கு வாய்ப்பு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு மீண்டும் வேட்பு மனு கோருவது வெட்கப்பட வேண்டிய ஓர் நிலைமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ தற்போது கட்சி பற்றி பேசி வருவதாகவும், கட்சியை விடவும் நாட்டை முன்னிலைப்படுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.