Header Ads



"தயாசிறியை பழிவாங்க 3000 ஆசிரியர், நியமனங்களை நிறுத்திய அமைச்சர்"

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தை விரைவில் ஏற்படுத்த போவதாக வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தை கட்டியெழுப்பி சகல இனங்களுடன் இணைந்து, நாட்டை முன்னெடுத்துச் சென்று முன்னுதாரண நாட்டை கட்டியெழுப்புவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

குருணாகல் மடிகே மிதியால பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நான் முதலமைச்சராக தெரிவாகி ஒன்றரை வருடங்களில் 31 பாடசாலைகளை ஆரம்பித்தேன். எதிர்காலத்திலும் தொடங்கப்படும்.

பாடசாலைகளில் காணப்படும் பௌதீக மற்றும் ஆசிரியர் பற்றாகுறை தீர்க்கப்படும்.

புதிய நல்லாட்சி அரசாங்கத்தின் தடைகளை மீறி முன்னேறி செல்ல வேண்டியுள்ளது. அமைச்சரவையினால் நாட்டுக்கு எந்த நன்மையுமில்லை. அதேபோல் அவர்களால் வடமேல் மாகாணத்தில் வேலை செய்ய முடியாது.

தயாசிறியை பழி வாங்குவதற்காக இந்த மாகாணத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் 3000 ஆசிரியர் நியமனங்களை நிறுத்தியுள்ளார். அவர் பழிவாங்குவது என்னை அல்ல, அப்பாவிகளான மாகாண மக்களை என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.