Header Ads



ரணிலைப் பிரதமராக்கியது நானே, தேவையான நேரத்தில் ரணில் எனக்கு உதவி செய்வார் - பசில்

-நஜீப் பின் கபூர்-

தற்போது நீதி மன்றத்தின் உத்தரவுப்படி கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்ற முன்னாள் அமைச்சர் பசிலைப் பார்க்க பெரும் எண்ணிக்கையான அவரது சகாக்கள் வைத்திய சாலைக்குப்போய் வந்து கொண்டிருக்கின்றார்கள்.

அப்படிப்போய் வருபவர்களுக்கு நோயாளியாக வைத்திய சாலையில் நிற்கின்ற பசில் 19,20 விடயங்கள் தொடர்பாக விரிவுரைகளை நடாத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது. இதனை விடவும் அதிர்ச்சியான தகவல் என்ன வென்றால் அப்படிப் போய் வருகின்றவர்களிடத்தில் இப்படி ஒரு அதிர்ச்சியான கதையை அவர் சொல்லி வருகின்றார்!

நான்தான் ரணில் பிரதமராக் காரணம் நானில்லாவிட்டால் அவர் எதிர்க் கட்சித் தலைவருமில்லை பிரதமருமில்லை. என்றே ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அவரை விரட்டி இருப்பார்கள்.

எனவே அவர் இந்தப் பதவிகளுக்கு வர நான் நேரடியாக உதவி செய்திருக்கின்றேன் இதனை ரணிலும் அறிவார். ஏற்றுக் கொள்வார் எனவே தேவையான நேரத்தில் ரணில் எனக்கு உதவி செய்வார் என்பது எனக்குத் தெரியும் என்று பசில் நோய் பார்க்க வருபவர்களிடத்தில் சொல்லி வருகின்றார். புரிகிறதா கதை!

1 comment:

  1. Very shame.... Yeeeeyah...!, When you came from US saying that you are nothing doing wrong and I'm ready to face any allegations, then why you are need Ranil's help? Still you and your brothers and their supporters are not realise, what is law and order? What is justice?

    ReplyDelete

Powered by Blogger.