சட்டத்தை கையில் எடுத்த ஞானசாரர், நல்லாட்சி மைத்திரி அரசாங்கம் வேடிக்கை பார்ப்பு
முழுமையாக முகத்தை மறைக்கும் தலைக் கவசங்களுக்கு தடை விதிக்கப்படுமாயின் அதற்கு முன்னர் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா, நிகாப் உடைகளுக்கு தடை விதிக்கப்படவேண்டும். என தெரிவிக்கும் ஞானசார தேரர் முகம் மூடிய முஸ்லிம் உடைகளுக்கு தடை விதிக்காதவரை யாரும் தலைக்கவச சட்டத்தினை பின்பற்ற வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்.
பொது பலசேனா பெளத்த அமைப்பினால் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவரால் தலைக்கவச சட்டம் தொடர்பில் வினவியபோது அவ் அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் நாம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பேசி வருகின்றோம். ஆனால் இன்று புதிய அரசு விசித்திரமான சட்டங்களை கொண்டு வந்து தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றது. முழுமையாக முகத்தை மூடிய தலைக்கவசம் அணிவதை தடுக்க வேண்டும் எனக் கோரி புதிய சட்டம் இயற்றியுள்ள இவர்கள் ஏன் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் நிகாப், பர்தா உடைகளுக்கு தடைவிதிக்கவில்லை. தலைகவசம் அணிந்து தப்பு செய்கிறவர் யார் என்பதை கவசத்தை கழட்டி பார்க்க முடியும். ஆனால் நிகாப் பர்தா உடைகளினுள் இருப்பர்கள் யார் என்பதை எவ்வாறு அவதானிப்பது.
கடந்த காலங்களில் இவ்வகையான ஆடைகளை பயன் படுத்தியே இலங்கையில் பல குற்றங்கள் இடம்பெற்றன. மாமா, அஸ்மின் போன்ற குற்றவாளிகள் இவ்வகை உடையினுள் ஒளிந்திருந்தே தப்பித்து வந்தனர். எனவே தலைக்கவசம் தொடர்பில் சட்டம் கொண்டுவந்து முழுமையாக முகத்தை மூடிய தலைக்கவசம் அணிவதை தடை செய்வதாயின் அதே சந்தர்ப்பத்தில் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா, பர்தா வகை உடைகளையும் தடை செய்து பாதுகாப்பினை உறுதிப்படுத்தவேண்டும். சட்டம் என்பது அனைவருக்கும் அனைத்து வகையிலும் பொருந்தக் கூடிய வகையில் அமையப்பெற வேண்டும். மத சார்பில் ஒரு சிலருக்கு சாதகமாகவும் ஏனையோருக்கு வேறு விதத்தில் சட்டம் இயற்றுவது ஏற்றுக் கொள்ள முடியாது.
முஸ்லிம் தீவிரவாதத்திற்கு முன்னுரிமை கொடுத்து நாட்டை சிறிது காலத்திலேயே இஸ்லாமிய தேசமாக்கும் செயற்பாடு மறைமுகமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. பிரபாகரன் வடக்கை மட்டுமே கோரி போராடினார்.
ஆனால் முஸ்லிம் தீவிரவாதம் மிகவும் மோசமாக அமைதியாக இருந்து காய் நகர்த்தி முஸ்லிம் மத வாதத்தினையும் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட கொள்கைகளையும் பரப்பி சிங்கள கொள்கைகளை அழிக்கின்றனர்.
எனவே முகத்தினை முழுமையாக மூடுவதை தடைசெய்யும் சட்டம் கொண்டு வரப்படுமாயின் முஸ்லிம் பெண்களின் முகத்தை மூடிய ஆடைகளையும் தடை செய்ய வேண்டும். அதை நடைமுறைப் படுத்தும் வரையில் இளைஞர்கள் யாரும் இச் சட்டத்தினை பின்பற்ற வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.
அஞ்ஞான சேரையின் சிவுரையும் தடை செய்ய வேண்டும். அதற்குள் எத்தனை மது போத்தல்கள், கஞ்சா, ஹெரோயின், கருத்தடை மாத்திரைகள் உள்ளனவோ யாருக்குத் தெரியும். இவருக்கு ஒரு டீ சேர்ட்டும், ஜம்பரும் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும்.
ReplyDeleteவாய் அறிக்கை விட்டு விட்டு இந்த அரசாங்கமும் சும்மா இருக்காது இந்த பிச்சு நாயைக் கொண்டு போய் அடைக்க வேண்டியது தானே. எங்கே ரிசாத் பதியுதீன்? எங்கே அசாத் சாலி? எங்கே ரவுப் ஹகீம்? எங்கே ஹலீம்? எங்கே மற்ற முஸ்லிம் அமைச்சர்கள்?? அழுத்தம் கொடுத்து கூண்டில் அடைக்க வேண்டும். தாமதம் அதிகரித்த பின்பு தலைக்கு மேல் அணை பாய்ந்துவிடுபதைத் தவிர்க்க முடியாது.
Where is MY3 Govt;? Why don't the authorities arrest this
ReplyDeletePerson who challenges the law of the land?
நான் சிரமப்பட்டு இங்கே வெளிப்படுத்திய எனது கருத்து பிரசுரமாகவில்லை. இது, கோத்தபாய வெள்ளை வேன் வைத்து கடத்திக் கொலை செய்ததற்கு ஒப்பான செயல் ஆகும்.
ReplyDeleteயாழ் முஸ்லிம் எனது கருத்துக்களை அனுமதிக்கும் விடயத்தில் தொடர்ந்தும் மோசமாக செயற்பட்டு வருகின்றது. கருத்துக்கள் என்று வருமிடத்து, மோசமான வார்த்தைகள், தனிப்பட்ட குரிதத்தை மையமாக கொண்ட தாக்குதல்கள் தவிர்ந்த ஏனையவற்றை பிரசுரிக்க வேண்டியது யாழ் முஸ்லிமின் பொறுப்பாகும்.
யாழ் முஸ்லிம் நினைப்பது போன்றும், யாழ் முஸ்லிம் சிந்திப்பது போன்றுமே எல்லோரும் சிந்திக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமற்ற செயலும், கருத்துச் சுதந்திர மறுப்பும், ஊடக தர்மத்திற்கு எதிரான ஒன்றுமாகும்.
எனது கருத்துக்கள் உங்கள் சிந்தனைக்கு ஏற்றவையாக இல்லை என்றால், மாற்றுக் கருத்து/ மறுப்பு முன்வைக்க உங்களுக்கும் இடமுள்ளது.
எனது சிந்தனையையும், கருத்து வெளிப்பாட்டையும் அல்லாஹ்தான் ஏற்படுத்தித் தந்துள்ளான், ஆகவே நீங்கள் எனது கருத்துக்களை பிரசுரிக்காமல் மறுப்பது, அல்லாஹ் ஏற்படுத்திய கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு எதிரானது ஆகும்.
யாழ் முஸ்லிம் தடை செய்யப்பட்டு இருந்த காலத்தில் கூட proxy மூலம் வாசித்து வந்த என்போன்ற வாசகர்களுக்கு கருத்துக்களை பதியக் கூட சந்தர்ப்பம் தராமல் இருப்பது ஊடக அராஜகம் ஆகும்.
இவன் ஒரு காவி யூதன் இவனை உடனே கைது பண்ண வேண்டும்
ReplyDelete