Header Ads



சுதந்திரக் கட்சி, உறுப்பினர்களுக்கு கட்டுப்பாடு - அனுர பிரியதர்சனயாபா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மீது சில கட்டுப்பாடுகளை விதிக்க அந்தக் கட்சி தீர்மானித்துள்ளது.

வேறும் அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்யும் அரசியல் கூட்டங்கள், நிகழ்வுகளில் பங்கேற்பது தொடர்பில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது.

வேறும் நிகழ்வுகளில் பங்கேற்பது குறித்து சில கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.

கட்சியின் நலனைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்திடம் அனுமதி பெற்றுக் கொள்ளாது வேறும் கூட்டங்கள் அமர்வுகளில் பங்கேற்க உறுப்பினர்களுக்கு அனுமதியில்லை எனத் தெரிவித்துள்ளார்.

கட்சிக்குள் ஒற்றுமை நிலவ வேண்டிய அவசியம் எழுந்து உள்ளதாகவும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கட்சி மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.