Header Ads



ஓந்தாச்சிமடத்திற்குள் புகுந்த 7 அடி முதலை - காவலில் ஈடுப்பட்ட பொலிஸார்


மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓந்தாச்சிமடம் முப்பத்தாறு வீட்டுத்திட்டக் கிராமத்திற்குள்  7 அடி நீளமுடைய முதலை ஒன்று உட்புகுந்த நிலையில் மட்டக்களப்பு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினர் பலத்த சிரமத்தின் மத்தியில் அவ்விடத்டிதிட்டு பாதுகாப்பாக குறித்த முதலையை அகற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;   

ஞாயிற்றுக் கிழமை (29)  அதிகாலை மூன்று மணியளவில் குறித்த முதலை குறித்த  இக்கிராமத்திற்குள் உட்புகுந்துள்ளது. இதனை நேரில் கண்ட மக்கள் செய்வதறியாது பீதி நிலையில் நித்திரையின்றி இருந்ததுடன் 119 என்ற  அவசரப்பிரிவு இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளனர்.   இதனை அடுத்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகைதந்து காவலில் ஈடுப்பட்டிருந்தனர். 

No comments

Powered by Blogger.