இலங்கை குறித்தான், ஜேம்ஸ் பக்கரின் கனவு கலைந்தது
கொழும்பில் கசினா சூதாட்ட நிலையத்துடன் கூடிய ஹோட்டல் நிர்மாணிக்கும் திட்டத்தைக் கைவிடப்போவதாக ஜேம்ஸ் பக்கரின் கிறவுன் குரூப் அறிவித்துள்ளது.
பக்கரின், சுற்றுலா மையம் உட்பட மூன்று வெளிநாட்டு சுற்றுலா மையங்களுக்கான தாராள வரி சலுகைகளை இரத்து செய்யப்போவதாக இலங்கையின் புதிய அரசாங்கம் வியாழன்று அறிவித்தது.
இதனால் அத்திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப் போவதில்லையென ஜேம்ஸ் பக்கரின் கிறவுன் குரூப் கூறியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இந்த கம்பனிக்கு பல வரிச் சலுகைகளை வழங்கியிருந்தது.
Post a Comment