Header Ads



ஹப்புத்தளையில் ஐ.தே.க. கூட்டத்தில் தாக்குதல் - 4 பேர் படுகாயம்

-Tm-

ஹப்புத்தளையில் ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய கூட்டத்தின் மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதல் சம்பவத்தையடுத்து ஸ்தலத்துக்கு பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சென்றுள்ளதாகவும் கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இத்தாக்குதலின் போது, வாகனங்களும் சேதமடைந்துள்ளன.

No comments

Powered by Blogger.