Header Ads



மஹிந்தவை ஆதரிக்கவுள்ளதால் முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைக்கவுள்ள சலுகைகள் ..!

(உதயன் பத்திரிகை)

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

   மகிந்த ராஜபக்ச இதற்குப் பிரதியுபகாரமாக அக்கட்சிக்கு வரப்பிரசாதங்களை அள்ளிக் கொடுக்க அரசாங்கம் முன்வந்துள்ளது. முதற்கட்டமாக கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதியமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளது. ஹரீஸ், பைசல் காசிம், எம்.எஸ். தௌபீக், அஸ்லம் ஆகியோர் இதன் மூலம் பிரதியமைச்சர்களாக தெரிவாகவுள்ளனர்.   மேலும் கட்சித் தலைவரின் உறவினர்களில் ஒருவருக்கு வெளிநாடொன்றுக்கான தூதுவர் பதவியும், இன்னொருவருக்கு கூட்டுத்தாபனமொன்றின் தலைவர் பதவியும் அளிக்கப்படவுள்ளது. 

  அமைச்சர் ரவூப் ஹக்கீமும் தற்போதைய அமைச்சினை விட அதிகாரம் கொண்ட அமைச்சுப் பதவியொன்றுக்கு நியமிக்கப்படவுள்ளார். பெரும்பாலும் கல்வித்துறையுடன் அல்லது அபிவிருத்தி சம்பந்தப்பட்ட அமைச்சுப் பதவியொன்று அவருக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.     அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் வழங்கும் ஆதரவுக்கு நன்றிக்கடனாக அக்கட்சியின் ஊடக ஆலோசகரை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது சுதந்திரக் கட்சியின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.   இவற்றோடு இணைந்ததாக கிழக்கு மற்றும் மேல் மாகாண சபைகளில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்கள் இருவருக்கு அதிகாரமற்ற , வசதிவாய்ப்புகள் கொண்ட பதவிகள் வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

4 comments:

  1. கொழும்பில் உள்ள ஊடகங்கள் எதையும் சொல்லலாம் அதை நாம் நம்பவேண்டிய அவசியமில்லை.

    முஸ்லிம்காங்கிரஸ் இற்கு முஸ்லிம்களின் ஆதரவு கிடைக்கக்கூடாது முஸ்லிம்களின் வாக்குகள் மீண்டும் சிதறடிக்கப்படவேண்டும் என்பதை அரசாங்கமே சொல்லியும் இருக்கலாம். யாரையும் நம்பும் அளவிற்கில்லை.

    இந்திய அரசியல்தான் மோசமாக இருந்தது அதைவிட இரண்டுபடி மேலாகிவிட்டது நமது நாட்டரசியல். காரணம் இந்த் அரசாங்கத்தின் கொள்ளையில் உள்ள குறைபாடு.

    ReplyDelete
  2. அமைச்சா் ஹகீம் அரசுக்கு எதிர,.... முஸ்லிம் மக்கள் சந்தேசமும் சந்தோகமும் கலர்ந்த அதிர்ச்சி (சென்ற வாரம்)

    முஸ்லிம் கான்கிரஸ் அரசுடன் இனைவு பதவி குடும்ப கெளரவம் உயர்வு,, முஸ்லிம் வாக்காள மக்கள். வாய் பிளப்பு ( இனி நகறும் தொடர்)

    ReplyDelete
  3. ONRUM WENDAAM UDATHTHA PALLIKAL ELLAAM KATTI TGARA WENDUM BBS THADAI SEYYA WENDUM GNANA SARA THERERA JAILIL PODAWENDUM APPA OK BOUDDA PAYANKARA WAATHAM THALAI THOOKKI ULLATHU APPADI MUSLIM CONGRAS PONAAL AWERKAL MUSLIM ILLAI MATHAM MAARIYA MURTHATHTHUKAL .MUSLIMKALE KAWANAM .

    ReplyDelete

Powered by Blogger.