Header Ads



'பர்தா'க்களை மட்டுமே பெண்கள் அணியவேண்டும் - ISIS கண்டிப்பான உத்தரவு


ஈராக்கில், பல நகரங்களை தங்கள் வசம் கொண்டு வந்துள்ள, ஐ.எஸ்.ஐ.எஸ்., கள், முழு உடலையும் மூடும் வகையிலான, 'பர்தா'க்களை மட்டுமே பெண்கள் அணிய வேண்டும்; இந்த உத்தரவை மீறினால் கடுமையாக தண்டிக்கப்படுவீர் என, எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஈராக்கின், திக்ரித், மொசூல் போன்ற பல நகரங்களையும், அதன் அண்டை நாடான சிரியாவில் பல நகரங்களையும் இணைத்து, இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ள, ஐ.எஸ்.ஐ.எஸ்., கள், அந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் முழுமையாக கொண்டு வந்து உள்ளனர். 

வெளியே நடமாடும் பெண்கள், தலை முதல் கால் வரை முழுவதும் மூடிய படி தான் வரவேண்டும். மீறினால் கடும் தண்டனை வழங்கப்படும் என, எச்சரிக்கை விடுத்துள்ளனர். துப்பாக்கி ஏந்திய ஐ.எஸ்.ஐ.எஸ்., கள், ஒவ்வொரு மசூதியாக சென்று, அங்குள்ள, 'ஸ்பீக்கர்' கருவியில் இதை தெரிவிக்குமாறு, மத குருமார்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ஐ.எஸ்.ஐ.எஸ்., கள் தரப்பில் கூறப்படும் போது, ''இது, கட்டுப்பாடு இல்லை. பெண்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை. பாலியல் பலாத்காரம், அத்து மீறலில் இருந்து பெண்களை காக்க இவை அவசியம்' என, தெரிவித்து உள்ளனர்.

No comments

Powered by Blogger.