Header Ads



அல்லாஹ் மீது ஞானசாரருக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதை வரவேற்கிறோம்..!

மனித இனத்தின் மீதும், மனிதாபிமானத்தின் மீதும் எவர் அநியாயமும், அட்டுழியமும் புரிகின்றாரோ அவருக்கு மாபெரும் நீதியாளனான அல்லாஹ் நிச்சயம் தண்டனை வழங்குவான் என்று பேருவளை நகரசபைத் தலைவர் மில்பார் கபூர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஞானசார தேரர் பௌத்தர்களுக்கு அநீதி இழைக்கும் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் தண்டனை கொடுப்பான் என்று குறிப்பிட்டிருக்கிறார். முஸ்லிம்களுக்கு எதிராக தீவிரமாக செயற்படும் ஞானசார தேரரிடம் அவர் உட்பட முழு மனித சமுதாயத்தையும் படைத்து பரிபாலிக்கின்ற அல்லாஹ் மீது நம்பிக்கை ஏற்பட்டிருப்பதை நாம் வரவேற்கிறோம். அந்த நம்பிக்கை உண்மையானதாகவும், சந்தர்ப்பவாதம் அற்றதாகவும் இருப்பதற்கு நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்.

மனித இனத்தின் மீதும், மனிதாபிமானத்தின் மீதும் அநியாயமும், அட்டுழியமும் புரிகின்ற எவரும் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பிக்கவும் முடியாது. இதனை ஞானசார புரிந்துகொண்டு அவற்றுக்கு ஏற்ப இனியாவது தனது பணிகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.

3 comments:

  1. அல்லாஹ் இவருக்கு ஹிதாயத்தை வழங்குவானாக.

    ReplyDelete
  2. ippadi patta nalla sindanai udaiwarghal than vendum.
    thuura nooku sindanai udaya samuthayam thewai
    ithu nabi sal sunnah

    ReplyDelete
  3. இவர் உண்மையில் மனம் திறந்து இவ்வார்த்தையை சொல்லி இருந்தால் அல்லாஹ் இவருக்கு ஹிடயத்தை கொடுப்பன் கொடுக்கட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.