Header Ads



''சிங்கள பௌத்த வாக்குகளை சிதறடிக்கும் கட்சிகள், தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கவேண்டும்''

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் ஒருவரை மாத்திரம் நிறுத்தினால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அது சாதமாக அமையும் என அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆனால், ஒன்றுக்கு மேற்பட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டால், அது ஜனாதிபதிக்கு பாதிப்பாக அமையும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் சிலரை தனது அமைச்சு அழைத்து ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஆய்வு அறிக்கையொன்றை சுட்டிக்காட்டி அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ள வாக்காளர்களை தம் பக்கம் ஈர்த்ததன் காரணமாகவே ஜே.வி.பி மற்றும் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி ஆகியன கடந்த மாகாண சபைத் தேர்தலில் பாரிய வளர்ச்சியை காட்டின.

இவ்வாறான நிலையில் எதிர்க்கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து அச்சமடைய தேவையில்லை.

ஆனால், சிங்கள பௌத்த வாக்குகளை சிதறடிக்கும் வகையில் ஏனைய அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Ha Ha Ha you and brothers should know the publics money taste.You are try to keep the power. . But almight allah will decide the power.

    ReplyDelete

Powered by Blogger.