Header Ads



''தொடர்ந்து உறுதியாக நின்று, இறைவன் நாடினால் இராண்டாவது வெற்றியை பெறுவோம்" - ஹமாஸ்

காசா எதிர்ப்பு போராட் டத்துடன் தமது கட்சியினர் இருப்பதாக ஹிஸ்புல்லாஹ் தலைவர் செய்யித் ஹஸன் நஸ்ரல்லாஹ் உறுதி அளித் துள்ளார். 

"பலஸ்தீன மக்கள் எழுச் சியுடன் ஹிஸ்புல்லாஹ் மற்றும் லெபனான் எதிர்ப்பு போராட்டம் இருக்கும். பலஸ்தீனர்களின் போராட்டம், மன உறுதி, நம்பிக்கை எமது மனங்களில் எப்போதும் இருக்கும்" என்று ஹமாஸ் தலைவர் காலித்; மி'hலிடம் நஸ்ரல்லாஹ் தொலைபேசி ஊடாக குறிப்பிட்டதாக ஹிஸ்புல்லாஹ் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர நியாயமான கோரிக்கையை முன்வைக்க ஹமாஸ{க்கு ஹிஸ்புல்லாஹ் ஆதரவாக இருப்பதாகவும் நஸ்ரல்லாஹ் வலியுறுத்தியுள்ளார். 

இதில் "தொடர்ந்து உறுதியாக நின்று, இறைவன் நாடினால் ஜ{லையில் ஒரு இராண்டாவது வெற்றியை பெறுவோம்" என்று மி'hல் உறுதி அளித்ததாகவும் ஹிஸ்புல்லாஹ்வின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பலஸ்தீன எதிர்ப்பு போராட்டம் நினைப்பதை விடவும் பலமானது என்று நஸ்ரல்லாஹ் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவுக்கு எச்சரிக்கை விடுத்தார். "நெதன்யாகு தனது (காசா மீதான) தாக்குதலுக்கு அரச மற்றும் சர்வதேச ஆதரவை கணக்கிட்டு வருகிறார். ஆனால் காசாவின் எதிர்ப்பு போராட்டம் பலமான மக்கள் ஆதரவுடனேயே செயற்படுகிறது" என்று அவர் சுட்டிக்காட்டினார். 

பலஸ்தீன இஸ்லாமிய ஜpஹாத் முன்னணியின் தலைவர் ரமதான் அப்துல் லாஹ் 'லாஹ்வை தொலைபேசியு+டாக தொடர்புகொண்டிருக்கும் நஸ்ரல் லாஹ், காசா யுத்த நிலவரம் குறித்து உரையாடியுள்ளார்.

1 comment:

  1. சவூதி தான் இஸ்ரேல் சிஒனிச வெறியர்களுக்கு எண்னை வழங்கி காசாமாக்களை அழிக்க ஸீஸீ நாயை உருவாக்கி வைத்துள்ளது ... இந்த சவூதி இசிரேழை விடவும் முனாஃபிக்குகள் நயவஞ்சகர்கள் .காட்டி கொடுப்பவர்கள் இந்த சவூதித்தான் ....காசாவை அழித்தால் ஹமாஸ் அழியும் ....பின்னர் வேண்டுமானால் காசாமாக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுப்போம் என்று சொல்வது ...கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது ..... ஹமாஸ் சுன்னி முஸ்லிம்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து அவர்களை வெளியேற்றினால் நாங்கள் யுத்தத்தை நிறுத்துவோம் என்று ஸீஸீ நாய்கள் வாஹ்ஹாபி குஞ்சுகள் இஸ்ரேல் இரத் த வெறியர்கள் சொல்வது ....எததட்கு என்று தெரிகிறதா...இது கனவிலும் நடக்காது....

    ReplyDelete

Powered by Blogger.