Header Ads



ராஜபக்ஷ அரசாங்கத்தின் முடிவிலேயே, பௌத்த சாசனத்தின் விடிவு காலம் உதயமாகும் - ரணில்

(Gtn)

ராஜபக்ஷ அரசாங்கத்தின் முடிவிலேயே பௌத்த சாசனத்தின் விடிவு காலம் உதயமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். போதைப் பொருள் விற்பனை செய்யும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வரும் இந்த அரசாங்கத்திற்கு நீண்ட காலம் ஆட்சியில் இருக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் 30-07-2014 இன்றைய தினம் நடைபெற்ற புத்திஜீவிகள் மாநாட்டில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பௌத்த சாசனத்தை அடிமைப்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் பௌத்த சாசனத்தை பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த சாசன அமைச்சில் உள்ள பௌத்த பிக்குகள் சிலர் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு சார்பாக செயற்பட்டு வருவதாகவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மாநாயக்க தேரர்கள் எதிர்ப்பை வெளியிட்ட நிலையில் கண்டியில் ராஜபக்ஷ அரசாங்கம் இரவு நேர கார்ப்பந்தயங்களை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Ungalazu mudivuleye U .N . P . Yin ezirhaalam irkkinrazu. Kaalakanniya. Behepan dhotta. Oba innakang kavadhaavath u . n .p. dhinanne . Ema nisa karunaa kara naayaka dhurayen illaa asvenna . A kohedha rajapaksa innakang obathamay vipaksha naayakaya.. ey me Kaatath therennethe . Pudhuma ratak pudhuma pakshayak ..kandaayame Anith paakshikayo dhannethuva innavadha nethnam dhenagana inavadha mama dhanne nehe . Oba innakang u.n.p ta ABA SARANAI......

    ReplyDelete

Powered by Blogger.