Header Ads



பேருவளை + அலுத்கம புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு இன்னும் 6 மாதங்கள் தேவை


பேருவலை மற்றும் அலுத்கம பிரதேசங்களில் அண்மையில் இடம்பெற்ற மோதல்களில் சேதமடைந்த வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களின் புனரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு இன்னும் ஆறு மாத காலங்கள் வரையில் செல்லும் என ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது பாதிப்புக்கு உள்ளாகியுள்ள 210 வீடுகளில் 34 முற்றாக புனரமைக்கப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அளுத்கம மற்றும் பேருவளை புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு பொருப்பான மேஜர் ஜெனரல் உதய மெதவல அளுத்கமவில் 30-07-2014 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டார்.

No comments

Powered by Blogger.