Header Ads



நீர்கொழும்பு நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை; அதிர்ச்சி தரும் CCTV காணொளி

நீர்கொழும்பு நகரில் அமைந்துள்ள நகைக் கடையொன்றுக்குள் நுழைந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்ட அதிர்ச்சி தரும் காணொளி வெளியாகியுள்ளது.

குறித்த கொள்ளையர்கள் சுமார் 30 இலட்சம் ரூபா பணம் மற்றும் தங்க நகைகளை நேற்றிரவு கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேரடங்கிய குழுவினர், தலைக்கவசத்துடன், நகைக் கடைக்குள் நுழைந்து, துப்பாக்கி முனையில் கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

இந்த கொள்ளைச் சம்பவம் நேற்றிரவு 7.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தப்பிச்சென்ற சந்தேகநபர்களை கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.