Header Ads



நீர்கொழும்பு நகரை கண்காணிக்க சீ.சி.டீ.வீ கமராக்கள்

நீர்கொழும்பு நகரை கண்காணிக்கும் வண்ணம் சீ.சி.டீ.வீ கமராக்கள் பொருத்தப்படவுள்ளன.

மீன்பிடி பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன தலைமையில், நீர்கொழும்பு காவற்துறை நிலையத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 17 ஆம் திகதி நீர்கொழும்பு நகரில் உள்ள நகையகம் மற்றும் வெளிநாட்டு நாணய பரிமாற்ற நிலையம் ஆகியவற்றில் ஆயுதாரிகள் கொள்ளையிட்டிருந்தனர்.

அதேவேளை, கடந்;த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி நீர்கொழும்பில் உள்ள தங்க ஆபரண மற்றும் வெளிநாட்டு பரிமாற்று நிலையங்களில் ஒன்றரை கோடி ரூபா கொள்ளையிடப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

No comments

Powered by Blogger.