Header Ads



துப்பத்தான் வேண்டும்...!


(கவிஞர் நாகூர் ழரீஃப்)

ஞானம் சாரா
ஞானசாரவின்
பித்தலாட்டங்களில்
முஸ்லிம்கள்
துப்பத்தான் வேண்டும்!

அன்னியர்களின்
உணவுகளில்
பாணங்களில்
மூன்று முறை
துப்பவேண்டும்
என்று அல் குர்ஆனில்
உள்ளதாகச் சொல்லும்
பொய்கள் மீது
துப்பத்தான் வேண்டும்!!

அன்னியர்களின்
காணிகளை
அபகரிக்குமாறு
அல் குர்ஆனில்
'தகிய்யா' என்ற
பகுதியில் கூறப்பட்டுள்ளதாக
சார கூறும்
பொய்கள் மீது சாரி சாரியாக 
துப்பத்தான் வேண்டும்!!

இனவாதத்தை 
தூண்டி நிற்கும்
இனவாதிகளின்
ஈன வாதத்தின் மீதும்
ஈனச் செயல்களின் மீதும்
துப்பத்தான் வேண்டும்!!

ஹலால் வேண்டாம்
என்று உலரிக்கொண்டு,
ஹலால் நாடுகளை
நோக்கி அலையும்
ஹராமிகளின்
கோஷங்களின் மீது
துப்பத்தான் வேண்டும்!!

சர்வதேச பயங்கரவாதம்
தேசத்துள் உள்ளதாக
உலரிக் கொண்டு,
சர்வதேசத்தை ஏமாற்றும்
பாது. செயலாளரின்
பாதுகாப்பற்ற பேச்சின் மீது
துப்பத்தான் வேண்டும்!!

எல்லாச் சமூகமும்
பொல்லாங்கின்றி
வாழ்வதாய் பொய்யுரைத்து,
வாழ்வாதாரம் தேடும்
தலைகளின் மீது
துப்பத்தான் வேண்டும்!!

சமூகம் எக்கேடு
கெட்டாலும்
என்கதிரை எனக்கென்ற
அமைச்சர்களின்
ஆசனங்களில்
அவர்களது பதவிகளில்
துப்பத்தான் வேண்டும்!!

1 comment:

  1. சும்மா துப்பக்கூடாது, காரித் துப்பத்தான் வேண்டும் என முடித்திருந்தால் இன்னும் நன்றாய் அமைந்திருக்கும்

    ReplyDelete

Powered by Blogger.