ஜனாதிபதி உண்மையான பௌத்தராக இருந்தால்...?
கொழும்பை சிக்காகோவாகவோ அல்லது பாங்கொக்காகவோ மாற்றிவிட வேண்டாம் என தேசிய சங்கப் பேரவை, அரசாங்கத்திடம் கோரியுள்ளது. ஜனாதிபதி மெய்யான பௌத்தராக இருந்தால் கசினோ சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேசிய சங்கப் பேரவையின் நிதிச் செயலாளர் வட்டரக்கே விஜித தேரர் தெரிவித்துள்ளார்.
கசினோ சூதாட்ட மையங்கள் அமைக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.நாடு எவரினதும் பொதுச் சொத்து அல்ல எனவும் கொழும்ப சிக்காகோ அல்லது பாங்கொக் போன்ற கசினோ புரியாக மாறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment