Header Ads



ஊவா மாகாணத்தில் கறுப்பு மழை


ஊவா மாகாணத்தின் பல பகுதிகளில் நேற்று (நேற்று வெள்ளிக்கிழமை முதல் இன்று அதிகாலைவரை கறுப்பு நிற மழைபெய்ததாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். 

உடுதும்பர, கோவில்மடு, ஹப்புகஸ்கும்புர மற்றும் லுணுகலை ஆகிய பகுதிகளில் கருப்பு மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். 

இதனால் வெயிலில் உலர வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற ஆடைகளில் கருப்பு கரை காணப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

மழைநீர் நிரப்பப்பட்ட பாத்திரங்ளில் கறுப்பு நிறத்திலான நீர் தேங்கியிருந்ததாக பிரதேச வாசிகள் மேலும் தெரிவிக்கின்றனர். குறித்த மழை நீரை பொதுமக்கள் சேமித்து வைத்துள்ளனர். 

No comments

Powered by Blogger.