Header Ads



பாலியல் வல்லுறவு சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த...!

தினகரன்

இன்று ஜனாதிபதி ஒருவருக்கு கிடைக்காத விளம்பரத்தை பத்திரிகைகள் முதல் பக்க செய்தியாக சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களின் புகைப்படத்தை வெளியிட்டு வருவதாக கூறினார்என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சிறுவர் துஷ்பிரயோகம் வீடுகளிலேயே அதிகமாக ஆரம்பிக்கிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாமா, அண்ணன்மார், ஏன் தந்தையரே தங்கள் பிள்ளைகளை வீட்டுக்குள்ளேயே வைத்து பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். எனவே, வீடுகளிலேயே இந்தப் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

முன்னாள் அரசாங்கங்கள் தங்கள் ஆதரவாளர்கள் இத்தகைய பாரதூரமான குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவற்றை மூடி மறைத்துவிடுவதுண்டு. ஆனால், இந்த அரசாங்கம் சிறிலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களோ, ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களோ இத்தகைய பாரதூரமான குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கூறினார்.

எனவே, பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பொலிஸ்காரரை பாதுகாப்பிற்கு அனுப்பி வைத்தால் அதனால் மேலும் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று ஜனாதிபதி சிரித்துக் கொண்டே கூறினார்.

1 comment:

  1. இஸ்லாமிய ஒழுக்கவியல் நெறிமுறைகள், குற்றவியல் சட்டங்கள் வராத வரை, யாருக்கும் முழுமையான பாதுகாப்புக் கிடையாது.

    ReplyDelete

Powered by Blogger.