Header Ads



சபாநாயகர் உடனடியாகத் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்


தற்போதைய சபாநாயகருக்கு எதிராக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவில் விசாரணை நடைபெற்று வருவதால், அவர் உடனடியாகத் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 


பாராளுமன்ற நிலையியல் கட்டளைகள் 29இன் கீழ் வரப்பிரசாத கேள்வியாக இதனை பாராளுமன்றத்தில் எழுப்பியதாகவும், சபாநாயகருக்கு எதிராக BC/0356/20/26 B 206 என்ற கோப்பு இலக்கத்தின் கீழ் தற்போது இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கு மேலும் வலியுறுத்தினார். 


புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 107 (2) பிரிவின்படி, அரச ஊழியர் அல்லது பொது அதிகாரசபை ஒன்று, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தனக்கு செல்வாக்கு செலுத்தக்கூடிய எந்தவொரு நடவடிக்கை அல்லது தீர்மானத்திலும் பங்கேற்கவோ வாக்களிக்கவோ கூடாது என்றும் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டுகிறார். 


அத்துடன், இத்தகைய செல்வாக்கைச் செலுத்துவது ஒரு மில்லியன் ரூபாய்க்கு மிகையாத அபராதம் அல்லது 7 ஆண்டுகள் வரையிலான கடூழிய சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அவர் இங்கு வலியுறுத்தினார். 


No comments

Powered by Blogger.