அர்ச்சுனாக்கு எதிராக பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணை
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அநுராதபுரத்தில் மொட்டுக் கட்சியின் பேரணி ஒன்று இடம்பெற்றது.
அந்த கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் இராமநாதன் அர்ச்சுனா ஒருசில கருத்துக்களை வெளியிட்டிருந்ததாக சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாட்டை ஆராய்ந்த காவல்துறைமா அதிபர், அது தொடர்பில் விசாரணை நடத்துமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதனையடுத்து அர்ச்சுனாவுக்கு எதிரான விசாரணையொன்றை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வங்கிக் கணக்குகளுக்கு வருகிறது பணம்! அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்

Post a Comment