கெபதிகொல்லாவையில் மனதை உலுக்கும் சம்பவம்
குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டு, பச்சிளம் குழந்தையுடன் சந்தோஷமாக வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த அந்தப் பயணம்… இப்படியொரு சோகத்தில் முடியும் என்று அந்தத் தாயும், குடும்பத்தினரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்…
பல மாதங்கள் காத்திருந்து… கனவுகளையும் ஆசைகளையும் மனதில் சுமந்து…
தங்கள் குழந்தையை முதன்முறையாக கையில் ஏந்திய அந்த மகிழ்ச்சியுடன் வீட்டை நோக்கிப் பயணித்திருக்கலாம்…
ஆனால், விதி வேறு ஒரு முடிவை எழுதியிருந்தது…
மூன்று உயிர்களும் ஒன்றாகப் பிரிந்துவிட்டன…
இதை நினைத்தாலே மனம் உடைந்து போகிறது…
அந்தக் குழந்தையின் எதிர்காலத்தைப் பற்றிய எத்தனை கனவுகள் இருந்திருக்கும்…
இறைவன் அவர்களின் ஆன்மாக்களுக்கு அமைதியையும், அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த பேரிழப்பைத் தாங்கும் சக்தியையும் வழங்கட்டும்.

Post a Comment