Header Ads



அநுரகுமாரவின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது.


நேபாள வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், இலங்கை 1 மில்லியன் அமெரிக்க டாலர் மனிதாபிமான உதவியை  இன்று (9) நேபாளத்திடம் அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளது.


இலங்கைத் தூதர் ருவந்தி டெல்பிட்டியா காத்மாண்டுவில் நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கானலிடம் இந்த உதவியை வழங்கினார்.


வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாக்குறுதி வழங்கியவாறு உதவுமாறும் ஏமாற்ற வேண்டாமெனவும் நாமல் Mp நேற்று (8) பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.