இத்தகைய அறிக்கையைக் கண்டு ஆச்சரியப்படுவார்கள்...
ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தனிநபர்களைப் பாதுகாக்க அக்கட்சி முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டது இது முதல் முறையல்ல என்று கூறிய ஜெயதிஸ்ஸ, ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது அவர் இதற்கு முன்னர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பதையும் குறிப்பிட்டார்.
"நாமல் ராஜபக்ச மீது குற்றம் சாட்டப்படுவதோ அல்லது விளக்கமறியலில் வைக்கப்படுவதோ ஒன்றும் அசாதாரணமானதல்ல. அவர் விளக்கமறியலில் வைக்கப்படுவது இது முதல் முறையல்ல," என்று அமைச்சர் கூறினார்.
"சமீபத்திய வழக்கு பல ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு குற்றச்சாட்டு தொடர்பானது என்றும், தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற பிறகு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுமார் ரூ. 100 கோடி மதிப்பிலானதாகக் கூறப்படும் இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுகளை இலஞ்ச ஆணைக்குழு விசாரித்துள்ளது என்று ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் உண்மைகளைத் தெரிவிப்பதற்கு முன்பே, ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பான 100 மில்லியன் தொகை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. "விசாரணை நடத்திய பின்னர், ஆணைக்குழு உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அவரை விளக்கமறியலில் வைக்கும் முடிவை எடுத்தது நீதிமன்றம்தான். இதுதான் நடைபெற்ற செயல்முறை," என்று அவர் கூறினார்.
"ஐக்கிய தேசியக் கட்சியை நேசிப்பவர்களும், அக்கட்சிக்காக நீண்டகாலம் பணியாற்றியவர்களும்கூட இத்தகைய அறிக்கையைக் கண்டு ஆச்சரியப்படுவார்கள் என்று நான் நினைக்கிறேன்," ஊழல் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிப்பதாக ஜெயதிஸ்ஸ குற்றம் சாட்டினார்.

Post a Comment