இலங்கைக்கான புதிய விமான சேவையை ஆரம்பித்த வியட்நாம்
வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனம் இலங்கைக்கான தனது புதிய விமான சேவையை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது.
இதன் மூலம் ஹோ சி மின் நகரையும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தையும் (BIA) இணைக்கும் விமான சேவை வாரத்திற்கு மூன்று முறை இடம்பெறவுள்ளது.
புதிய சேவையின் முதலாவது விமானம் BIA விமான நிலையத்தை வந்தடைந்தபோது, Airport & Aviation Services Sri Lanka நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய நீர் பீச்சி வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து, இலங்கை சுற்றுலாத்துறையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டிய நடன நிகழ்வும் விமானப் பயணிகளுக்காக நடத்தப்பட்டது.
இந்த புதிய நேரடி விமான சேவை இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான சுற்றுலா, வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment