விந்தணு கடத்தலூடாகப் பிறந்த அலியும், ஓதாரும்
சிறைவாசத்தின் சவால்களையும், வாழ்வின் மீதான பிடிப்பையும் பறைசாற்றும் விதமாக, இஸ்ரேல் சிறைக்குள்ளிருந்து ரகசியமாகக் கடத்தப்பட்ட விந்தணுவைப் பயன்படுத்தி, ரமல்லா மாவட்டத்தின் பெய்ட் ரிமா கிராமத்தைச் சேர்ந்த கைதி பாசெல் அப்துல் ரஹ்மான் அல்-அஸ்மாருக்கு அலி மற்றும் ஓதார் ஆகிய இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.
1976-இல் பிறந்த அல்-அஸ்மார், பிப்ரவரி 20, 2002 முதல் சிறைபிடிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் சிறைகளில் 24 ஆண்டுகளுக்கும் மேலாகக் கழித்துள்ள இவர், ஆயுள் தண்டனை மற்றும் கூடுதலாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்கிறார்.
பலஸ்தீனமும், மக்களும், அதன் சந்ததியினரும் வாழட்டும்
ஆதாரம் - பலஸ்தீன கைதிகள் ஊடக அலுவலகம்:

Post a Comment