Header Ads



கடன் தொகையை செலுத்தும் முழுத் திறனையும் இலங்கை கொண்டுள்ளது


இதுவரைகாலமும் தாம் பெற்றுள்ள கடன் தொகையை செலுத்தும் முழுத் திறனையும் இலங்கை கொண்டுள்ளது என தெரிவித்த மத்தியவங்கி ஆளுநர், அடுத்த 10 ஆண்டுகளில் எவ்வித இடையூறும் இன்றி கடமைகளை நாடு நிறைவேற்றும் எனவும் உறுதியளித்துள்ளார்.


 கடன் மறுசீரமைப்புச் செயல்முறையின் வெற்றியே இதற்குக் காரணம். நாடு கடன் செலுத்தத் தவறுதல் அல்லது முன்னர் சந்தித்ததைப் போன்ற மற்றொரு கடன் நெருக்கடியை எதிர்கொள்ளாது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 5 சதவிகித வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.


மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய பதட்டமான சூழலுக்கு மத்தியில், உலகளாவிய எரிபொருள் விலைகள் மற்றும் பருவநிலை மாற்றத்தில் உள்ள நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியிலும், இந்தப் பொருளாதார இலக்குகளை அடைந்ததற்காக இலங்கை சர்வதேச அளவில் பாராட்டப்பட்டுள்ளது.


கொழும்பில் நடைபெற்ற இலங்கை வெளிநாட்டுத் தூதர்கள் கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த விடயத்தை வெளிப்படுத்தினர்.

No comments

Powered by Blogger.